search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports"

    • பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைமாலை–யம்மன் சமேத திருமேனி–நாதர் சுவாமி கோவிலில் பிட்டுத்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட் டிக்கு உதவி செய்ய எண்ணி மனித உருவில் வந்த சிவ–பெருமான், மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

    ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம் பால் அடித்த திருவிளையா–டலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த பட–லம் ஆகும். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடி–யாக உதவ வருவேன் என் பதை உணர்த்தவும் ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அனைத்து சிவாலயங்களி–லும் விமரிசையாக கொண் டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த திருமேனிநாதர் சுவாமி கோவிலிலும் பிட்டுத்திரு–விழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடை–பெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    • பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியும் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு களரம்பட்டி, அரசு ஆதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறுவட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளருமான ஆறுமுகம் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குனரும், குறுவட்ட போட்டிக்கான இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    • நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும்.
    • கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

    "நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்" என சத்குரு கூறியுள்ளார்.

    இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' நாளை மறுநாள் (ஆக.12) தொடங்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், "நம் பாரத கலாச்சாரத்தில் வாழ்க்கையையே ஒரு விழாவை போல் கொண்டாட்டமாக வைத்து இருந்தோம். நம் தேசத்தில் 365 நாட்களும் ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். விழா என்றால் வேலை செய்ய கூடாது; விடுமுறை எடுக்க வேண்டும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது அல்ல. எப்போது நீங்கள் எல்லா செயல்களையும் கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்.

    நம் கிராமங்களில் உழவு செய்யும் போது, நெசவு நெய்யும் போது, சமையல் செய்யும் போது, குழந்தையுடன் விளையாடும் போது என எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பாட்டும் கொண்டாட்டமும் இருக்கும். எப்போது நம் வாழ்வில் இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம் வரும்.

    நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். உங்களுடைய பாட்டி சீரியஸ் ஆக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் போவதற்கு தயாராகிவிட்டார் என்று தானே அர்த்தம். நீங்கள் அப்படி ஆக கூடாது. எப்போதும் சுறு சுறுப்பாகவும் புத்துணர்வாகவும் இருக்க வேண்டும். உங்களுக்குள் விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் விளையாடி கொள்ளலாம்.

    கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. சமூகங்களில் ஜாதி, மதம் என பல விதமான பாகுபாடுகள் வந்துவிட்டது. இதற்காக தான் ஈஷா கிராமோத்சவம் திருவிழா. 2004-ம் ஆண்டு இதை முதல் முறையாக தொடங்கினோம். இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள் கிடையாது. வீட்டில் சமையல் செய்யும் பாட்டியும் அவருடைய பேரன் பேத்திகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில் விளையாடுகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில் வேறு எங்கும் இல்லை என கூறலாம். அந்தளவிற்கு மிகப் பெரிய அளவில் மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இப்போது நம் பாரத தேசம் பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நம் வாழ்வில் விளையாட்டும் கொண்டாட்டமும் இல்லாமல் போய்விட்டால் பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?" என வீடியோவில் சத்குரு கூறியுள்ளார்.

    • 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
    • வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    கிராம மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஈஷா யோக மையத்தின் அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டுத் திருவிழா 'ஈஷா கிராமோ த்சவம்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது. இவற்றில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஈஷாவின் கிரா மோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், 151 இடங்களில் 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. வருகிற 12-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிராமத் திருவிழாவில், ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான எறிபந்து, இரு பாலருக்குமான கபடி போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். 14-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

    மேலும், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்களும் நடத்தப் படுகின்றன. திருவிழாவில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம். தமிழகத்தில் மட்டும் 67 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வருகிற 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது
    • முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டிகளை தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கிடையே குறுவட்ட அளவிலான குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், அரியலூர் நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ், விளையாட்டு குழுத்தலைவர் அருண்ராஜ் எழில்மாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கண்ட போட்டிகளின் நடுவராக உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி , வீரபாண்டியன் , செல்வ பாண்டியன் , தினேஷ் குமார் , இளவரசன் ,வில்லாளன் , சம்பத் , ஜபருல்லா ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி , உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளான மேசைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .மேசைப்பந்து பிரிவு போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பந்து போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கிழுமத்தூர் மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அறிவேல் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்களுடன் இணைந்து எம்எல்ஏ வாலிபால் ஆடினார்
    • நன்கு விளையாட இளைஞர்களுக்கு அறிவுரை

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தீத்தானிப்பட்டி ஊராட்சியில் இளைஞர்கள் வாலிபால் ( கைப் பந்து ) விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து தானும் அவர்களுடன் இணைந்து விளையாடினார். 

    • விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது.
    • கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விளையாட்டு துறைக்கு அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுகள் நடத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அரசின் சின்ன சின்ன திட்டங்களை கண்காணிக்க நடந்த ஆய்வின் போது, உலகத்தர விளையாட்டு நகர திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விளையாட்டு நகரம் அமைக்கக் கூடிய 3 இடங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது' என்று கூறி இருந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் அமைய உள்ள உலகத்தர விளையாட்டு நகரத்தில் ஒரு பெரிய ஸ்டேடியம், கால்பந்து மைதானம், தடகள விளையாட்டு பகுதி, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் இடம் இதில் இடம் பெற்றிருக்கும். விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் மற்றும் குத்தம்பாக்கம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பஸ் நிலையங்களை அமைத்து வருகிறது. 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.

    இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

    மேலும், மகுடஞ்சாவடி யில் 2 மைதானமும், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஊரக விளையாட்டு மைதானமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு மைதானப் பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு சங்கங்கள் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தினை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    ஊரக விளையாட்டு மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலூர், சேலம், சங்ககிரி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் ஏற்காடு வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களுக்கு ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைமேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஓமலூர் மற்றும் வீரபாண்டி வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மைதானம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாணவ, மாணவியர் களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்படும் நேரத்தினை மற்ற பாடங்களுக்காக எடுத்துக்கொள்ளாமல் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பாக விளையாட அனுமதிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே மிகச் சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும் என்பதாலும், காலை, மாலை இரு வேலையும் விளையாடு வதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அட்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    • சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
    • அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியா விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பல்வேறு விளை யாட்டு போட்டிகளுக்கு சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், விளை யாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகம் 66 சதவீதம் உயர்த்தியுள்ளது.

    தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான அமைச்சக உதவித்திட்டத் தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

    திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அங்கீரிக்கப்பட்டப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.

    உணவு, உறைவிடம், உள்ளூர் போக்குவரத்து, சில நேரங்களில் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செலவு உச்சவரம்பு இருக்கும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு நவம்பரில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டதால் உச்சவரம்பு திருத்தியமைக்கப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அனிதா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டி யில் வெற்றிப் பெற்ற வீரர்கள் 1,800 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றித்தரும் என்று அவர் பேசினார்.

    மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா, கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகர துணை காவல் கண்கா ணிப்பாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    குமாரபாளையம்: 

    குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

    ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

    சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
    ×