search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி
    X

    திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி

    • பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைமாலை–யம்மன் சமேத திருமேனி–நாதர் சுவாமி கோவிலில் பிட்டுத்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட் டிக்கு உதவி செய்ய எண்ணி மனித உருவில் வந்த சிவ–பெருமான், மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

    ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம் பால் அடித்த திருவிளையா–டலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த பட–லம் ஆகும். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடி–யாக உதவ வருவேன் என் பதை உணர்த்தவும் ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அனைத்து சிவாலயங்களி–லும் விமரிசையாக கொண் டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த திருமேனிநாதர் சுவாமி கோவிலிலும் பிட்டுத்திரு–விழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடை–பெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×