search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snow"

    காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD
    புதுடெல்லி:

    காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.

    இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீரில் இன்றும், நாளையும் பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும்.

    டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.

    வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது. #Kashmir #Snowfall
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நீடித்து வருகிறது.

    டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகாலையில் பயங்கர குளிர் காற்று வீசுகிறது. இதனால் போக்குவரத்துகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

    இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் பனிக் கட்டியாக மாறி வருகிறது. புகழ்பெற்ற டால்ஏரி முற்றிலும் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.

    அதிகாலையில் குளிர் காற்று வீசுகிறது. வாட்டி வதைக்கும் அந்த குளிர் காற்றை எதிர்கொண்டு செல்ல முடியாததால் பகல் 11 மணி வரை வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி மிக குறைவான மைனர் 8 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. தற்போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் காஷ்மீருக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கார்கில் பகுதியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

    குளிர் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு உள்பட உடல்நலக்குறைவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் மாநில டாக்டர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது. #Kashmir #Snowfall
    ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, தத்தனூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

     மேலும் திருச்சி-சிதம்பரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையிலும், கும்பகோணம் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும்  கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் விபத்துகளை தவிர்க்க டிரைவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து சென்றனர். 8 மணிஅளவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பனி மெதுவாக விலகி சென்றது.

    இந்த பனிப்பொழிவால் நெற்பயிருக்கோ, பூக்கள் செடிக்கோ பாதிப்பு ஏற்ப டுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  பனிப்பொழிவு காணப்பட்டது.
    கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஓரிரு மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். மழை காலங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி மகசூல் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 மாதங்களாக பெய்தது. இதனால் கோத்தகிரி பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். மழை ஓய்ந்த நிலையில் தற்போது கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளது. நீர்பனியில் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    வருடந்தோறும் செப்டம்பர் இறுதி வாரத்தில் தான் நீர்பனி விழும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாக நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீர்பனியால் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குளிரும் அதிகரித்துள்ளது. அதிகாலையில் குளிரின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. குளிரின் காரணமாக ஸ்வெட்டர், சால்வை மற்றும் ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
    ×