search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris District"

    நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் கூறினார்.
    கோத்தகிரி:

    நாட்டு மக்களின் குறைகளை அறியும் வகையில் அவர்களிடம் கருத்து கேட்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மக்கள் தங்களது குறைகள் அல்லது கருத்துகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் வகையில் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இந்த திட்ட தொடக்க விழா கோத்தகிரியில் நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் கேப்பிடல் போஜன் தலைமை தாங்கினார். மணிகண்டன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் அன்பரசன், கணேசன். முருகன், ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கிராமங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சேரம்பாடி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. பந்தலூரில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 36 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நீலகிரியில் இதுவரை 1 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். விடுபட்டவர்களை இணைக் கும் பணி நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு 800 வீடுகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.493 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பயிற்சி மற்றும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவது, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குக்காக பணம் வழங்குவது போல உள்ளது என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தவறான பிரசாரம். விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவசாயிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம். இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பது, பச்சை தேயிலைக்கு போதுமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது குறித்த வாக்குறுதி பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் நீலகிரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கோத்தகிரியில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. எவ்வித பிணையும் இன்றி முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கடன் வழங்காத வங்கி மேலாளர்கள் மீது புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கேம்ப்லைன், இடுக்கொரை, அருள்நகர் ஆகிய பகுதிகளில் ஆணைய துணை தலைவர் முருகன் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக்கு கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 678 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போக்குவரத்து கழகங்களுக்கு 555 புதிய பஸ்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 140 புதிய பஸ்கள் வந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்-திருப்பூர், குன்னூர்- சேலம், கோத்தகிரி-பெரம்பலூர், கோத்தகிரி-மதுரை, கோத்தகிரி-திருச்சி, கோத்தகிரி-ஈரோடு, கூடலூர்-சேலம், கூடலூர்-திருப்பூர், கூடலூர்- ஈரோடு, கூடலூர்-கோவை, அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிளை-2-ல் இருந்து ராஜபாளையம், ஈரோடு, ஊட்டி-துறையூர், ஊட்டி-கள்ளிகோட்டை, ஊட்டி-ஈரோடு, ஊட்டி-சேலம் ஆகிய வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து 20 புதிய பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அதில் ஒரு புதிய பஸ்சை பார்வையிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் கடந்த ஆண்டு 19 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது நடப்பாண்டில் ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்பில் 20 புதிய பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

    அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டல பொது மேலாளர் மோகன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதிய பஸ்களுக்கு மாலை போடப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.

    வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கிக்கிளை தொடங்கப்பட்டு உள்ளது. அரசு மானியங்களை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    இந்தியா அஞ்சல் துறையில் அனைத்து தபால் நிலையங்களும் கணினி மயமாக்கப்பட்டு, பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்திய அஞ்சல் துறை வங்கி களின் சேவைகளை அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிராம மக்களுக்கும் எளிதாக வழங்குவதற்காக அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற தபால் நிலையங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் துணை தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். வங்கிக்கிளையை கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி கணக்கை கணினி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் பயன்கள் குறித்த நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் வங்கி கணக்கு தொடங்கிய 200 பேரில் சிலருக்கு பணம் எடுக்கவும், செலுத்தவும் வசதியாக ‘கியூர்ஆர்’ அட்டைகள் வழங்கப்பட்டன.

    பின்னர் நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி சேரிங்கிராஸ் துணை தபால் நிலையம், மசினகுடி துணை தபால் நிலையம், மாவனல்லா, மாயாறு, சிங்காரா ஆகிய 5 தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டும் போதுமானது. புகைப்படமோ அல்லது இருப்பிட சான்றிதழோ தேவையில்லை. பணம் செலுத்தாமலேயே வங்கி கணக்கை தொடங்கலாம். இதன் மூலம் ஓய்வூதிய பலன்கள், கியாஸ் மானியம், அரசு வழங்கும் மானியங்களை பெறலாம். மொபைல் வங்கி செயலி, குறுஞ்செய்தி போன்ற வசதிகளும் உள்ளன.

    தபால்காரர்கள் உங்களது வீட்டுக்கு வரும் போது, கியூஆர் அட்டை சொருகி தங்களது கைரேகை வைத்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல தபால்காரர் மூலம் வங்கி கணக்கில் பணமும் செலுத்தலாம். இந்த பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். எதிர்காலத்தில் விவசாயத்துக்கான மானியம், மத்திய அரசின் மானியம், கடன் தள்ளுபடி போன்ற பயன்களை வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

    அனைத்து கிராமங்களிலும் துணை அஞ்சலகங்கள், கிளை தபால் நிலையங்கள் உள்ளதால் சாதாரண மக்கள் வங்கியை நாடி செல்ல வேண்டியது இல்லை. இருப்பு வைக்கும் பணத்துக்கு தினமும் 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். குடிநீர், மின்சாரம், டி.டி.எச். கட்டணம், கல்லூரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். இந்த திட்டம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊட்டி தலைமை தபால் அலுவலக அதிகாரி உமாமகேஸ்வரி, குன்னூர் தபால் அதிகாரி சுப்பிரமணி மற்றும் ரவிசந்திரன், ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    ×