search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle suffering"

    ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, தத்தனூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

     மேலும் திருச்சி-சிதம்பரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையிலும், கும்பகோணம் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும்  கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் விபத்துகளை தவிர்க்க டிரைவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து சென்றனர். 8 மணிஅளவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பனி மெதுவாக விலகி சென்றது.

    இந்த பனிப்பொழிவால் நெற்பயிருக்கோ, பூக்கள் செடிக்கோ பாதிப்பு ஏற்ப டுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  பனிப்பொழிவு காணப்பட்டது.
    ×