search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smith"

    முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் சமயத்தில் பால் டேம்பரிங் சம்பவம் உதவிக்காக அழுவதுபோல் உள்ளது என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது கேப் டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் கேப்டன் ஸ்மித்திற்கும், துணைக் கேப்டன் வார்னருக்கும் தெரியும் என்று விசாரணையில் தெரிந்தது.

    பந்து சேதப்படுத்திய குற்றத்திற்காக ஐசிசி ஒரு டெஸ்டில் விளையாட தடையும், அபாரதமும் விதித்தது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதித்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடைவித்தது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தண்டனையை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விரும்பவில்லை. இது மிகப்பெரிய தண்டனை என்று குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் நிலையில் பால் டேம்பரிங் விவகாரம் உதவிக்காக அழுவது என்று தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘கேப்டவுன் டெஸ்டின் போது நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை. இது குறித்து நீங்கள் யோசித்தால், அது கிட்டத்தட்ட உதவிக்காக அழுவது போல் உள்ளது. நாம் ஏதாவது செய்ய வேண்டும்.



    பந்து வீச்சாளர்கள் எது செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு போட்டியை எளிதாக்கும் வகையில் அமைகிறது. பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகி விடுகிறது.

    தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக அளவில் சாதகமாக உள்ளது. மைதானத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது, இரண்டு புதிய பந்துகள், பவர்பிளே, நிர்ணயித்ததை விட பெரிய பேட் என நீண்டு கொண்டே செல்கிறது.

    பந்து வீச்சாளர் நோ-பால் வீசினால், அது ப்ரீ ஹிட்டாக மாறிவிடுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் விதிமுறை மாற்றப்பட்டதை நான் பார்க்கவே இல்லை’’ என்றார்.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி இங்கிலாந்து தொடரில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. #ViratKohli
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விளங்கிய ஸ்மித் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் 929 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 855 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் ஓராண்டு தடைபெற்றுள்ளார். அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது.



    அதேவேளையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 920 புள்ளிகளுக்கு மேல் குவித்து சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.

    டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக 941 புள்ளிகளும், ஸ்மித் 941 புள்ளிகளும், ஜோ ரூட் 917 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.



    டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். ஒருவேளை இங்கிலாந்து 5-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தால், 10 புள்ளிகள் பெற்று 107 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறிவிடும். தென்ஆப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கும், ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும், நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கும் சரியும். #ICCRankings #ENGvIND
    ஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். #Warner #Smith
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது ஆஸ்திரேலியாவின் கீழ்மட்ட போட்டிகளிலும், வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைக்குப்பின் முதன் முறையாக இருவரும் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் பங்கேற்றார்கள்.



    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலர் இருவரையும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி ‘‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஆஸ்திரேலியா தேசிய அணிக்கும், கிளப் லெவல் ஆன தொடருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வரும டிசம்பர் மாதம் தொடங்கும் 2018-19 சீசனில் விளையாட வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர், ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு ஷேன் வாட்சன் அதிரடி முக்கிய காரணமாக அமைந்தது. அவர் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரத்தில் இவருக்கு 9 மாதம் தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் இதற்கு துணையாக இருந்த கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது.



    மூன்று பேரின் தண்டனை மிகவும் அதிகபட்சமானது என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தடையை ஒப்பிடும்போது அவர்கள் மீதான் தண்டனை மிகவும் அதிகபட்சமானது. கடந்த காலங்களில் இதுபோன்று நடைபெற்ற தவறுகளுக்கு இப்படி தண்டனை கொடுக்கப்படவில்லை.

    மூன்று பேரும் அதிப்படியான விலையை கொடுத்துள்ளனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீண்டும் அணிக்கு திரும்பும்போது, மக்களின் நல்ல பெயர் எடுக்க எல்லாவகை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.



    இதற்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஸ்மித், வார்னருக்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Smith #warner
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.



    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிளப் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
    ×