search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivsena"

    பாராளுமன்றம் - மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள பாஜக இனி, அமெரிக்கா, ரஷியாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தலாம் என சிவசேனா கிண்டல் செய்துள்ளது. #OneNationOnePoll #Shivsena #BJP
    மும்பை:

    மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு பாஜக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆதரவாக உள்ளது. தேர்தல் செலவுகள், மனிதவளம் ஆகியவை ஒரே தேர்தல் முறையில் குறையும் என இந்த திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் கூறுகின்றன.

    ஆனால், மத்தியில் ஆட்சி கவிழும் பட்சத்தில் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவீர்களா? என இந்த திட்டத்தை எதிர்பவர்கள் குரல் கொடுக்கின்றனர். திமுக, திரினாமுல், சிவசேனா, இடதுசாரிகள் என முக்கிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சட்ட கமிஷன் சென்று, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பாஜக ஆதரவாக இருப்பதாக தெரிவித்து கடிதம் அளித்தார். 

    இந்நிலையில், அமித் ஷாவின் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “அவர்கள் (பாஜக) பாராளுமன்றம் - அனைத்து மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தலாம். இல்லையெனில், அமெரிக்கா, ரஷியாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தலாம். பாஜக தலைவர்களின் தலையில் இருந்து என்ன வெளிவரும் என யாருக்கும் தெரியாது?” என கூறியுள்ளார்.
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் பேராசையே காரணம், இந்த பேராசைக்கு, காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இதனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    மும்பை :

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில்,  சமீபத்தில் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திடீரென பா.ஜ.க. அறிவித்தது. அதன் பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜக.வுடன் கூட்டணி ஆட்சி செய்துவரும் சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பிரதமர் நரேந்திர மோடி குழந்தையுடன் விளையாடுவதை போன்று இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்ட பின்னர் கூட்டணி ஆட்சியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளது.

    முன்னெப்போதும் இல்லாமல் தற்போது காஷ்மீரில் மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது, பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்.

    இந்த அராஜகங்கள் எல்லாம் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தான் நடந்தேறியது. ஆனால், மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சியின் மீது அனைத்து பழிகளையும் சுமத்திவிட்டு தான் ஒரு புனிதமான கட்சி என்பது போல் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது.

    காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை மோடி உருவாக்குவார் என்ற நம்பிக்கையிலேயே பா.ஜ.க.விற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சியை விட கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே பரவாயில்லை எனும் மனநிலைக்கு அம்மாநில மக்கள் வந்துவிட்டனர்.

    பாஜகவின் பேராசையே அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க தூண்டியது, அந்த பேராசைக்காக காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டார்கள். வரலாறு ஒருபோதும் பாஜகவின் செயலை மன்னிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். #CMDevendraFadnavis #Shivsena #UddhavThackeray
    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா - கோண்டியா மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா - கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டு வருவதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். #CMDevendraFadnavis #Shivsena #UddhavThackeray
    ×