search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJPDumpsPDP"

    காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் பேராசையே காரணம், இந்த பேராசைக்கு, காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இதனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    மும்பை :

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில்,  சமீபத்தில் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திடீரென பா.ஜ.க. அறிவித்தது. அதன் பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜக.வுடன் கூட்டணி ஆட்சி செய்துவரும் சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பிரதமர் நரேந்திர மோடி குழந்தையுடன் விளையாடுவதை போன்று இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்ட பின்னர் கூட்டணி ஆட்சியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளது.

    முன்னெப்போதும் இல்லாமல் தற்போது காஷ்மீரில் மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது, பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்.

    இந்த அராஜகங்கள் எல்லாம் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தான் நடந்தேறியது. ஆனால், மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சியின் மீது அனைத்து பழிகளையும் சுமத்திவிட்டு தான் ஒரு புனிதமான கட்சி என்பது போல் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது.

    காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை மோடி உருவாக்குவார் என்ற நம்பிக்கையிலேயே பா.ஜ.க.விற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சியை விட கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே பரவாயில்லை எனும் மனநிலைக்கு அம்மாநில மக்கள் வந்துவிட்டனர்.

    பாஜகவின் பேராசையே அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க தூண்டியது, அந்த பேராசைக்காக காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டார்கள். வரலாறு ஒருபோதும் பாஜகவின் செயலை மன்னிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    ×