search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shirdi"

    • சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.
    • 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

    கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில்

    அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.

    5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    • பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.
    • அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

    துவாரகாமாயீயில் சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

    அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.

    அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

    தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து "உதி" என்று அழைக்கப்படும்

    விபூதியை எடுத்து தருவார். அக்னி குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

    பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.

    எல்லாவித ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்க வல்லது.

    தினமும் குளித்தபின் உதியை நெற்றியில் இட்டு கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

    பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.

    அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

    சாய்பாபா என்னும் மந்திர சொல்

    இந்த மந்திரச்சொல்லின் "சாய்" என்ற சொல்லுக்கு, "சாட்சாத் கடவுள்" என்ற அர்த்தமாம்.

    இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

    • ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.
    • ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார்.

    சீரடி சாயி பாபா இரண்டாவது முறையாக இளைஞனாக சீரடி வந்தபோது மகல்சாபதிதான் அவரை வரவேற்றார்.

    அவ்வூர் மக்களுக்கு அவர் ஒரு மஹான் என்பதோ பெரும் ஞானி என்பதோ சத்குரு என்பதோ தெரியவில்லை.

    ஆகவே அவர் தங்க இடம் கேட்டபோது அவரை சிதிலம் அடைந்த மசூதிக்கு அனுப்பினார்கள்.

    ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.

    ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார். கிழிந்து போன உடை, இடிந்து பாழாய்ப் போன ஒரு மசூதி.

    இவற்றுக்காக ஏதும் முணுமுணுத்தாரா? அவருக்கு எல்லாம் சமம்தானே! நாளாவட்டத்தில் அந்த மசூதி கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தப்பட்டது.

    பாபாவும் அதற்கு துவாரகாமாயி எனப் பெயர் சூட்டினார்.

    பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம்.

    அங்கே அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படும். கவலை ஓடிவிடும்.

    கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வரும்.

    எனவேதான் பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்.

    அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அது திறந்த வெளி தர்பார்.

    ஒளிவு மறைவு என்று ஏதுமில்லை, கெடுபிடியில்லை, எல்லோரும் வரலாம், எளிதாக தரிசனம் பெறலாம்.

    • பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்று கூறினார்.
    • இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.

    பத்தாண்டுகளுக்கு பின்னர் சாந்த்பாய் என்ற இசுலாமியரின் உறவினர் இல்ல திருமண கூட்டத்தினருடன் மீண்டும் சாய்நாதர் சீரடிக்கு வந்தார்.

    அப்போது பூமியினுள் சாயிநாதர் சென்ற நிகழ்வை கங்காபாய் அனைவரிடமும் தெரிவிக்க,

    அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்து, அனைவர் முன்னிலையிலும் தோண்டினர்.

    அங்கே பத்தடி ஆழத்தில் ஒரு கதவும், அந்த கதவின் உள்ளே ஒரு தியான பலகையும் அதன் மீது

    உத்திராட்ச மாலையும், நான்கு விளக்குகள் எரிந்துகொண்டும் இருந்தன.

    பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்றும்,

    அதன் பெயர் குரு ஸ்தானம் என்றும் அதனை மூடி விடும்படி கேட்டுக்கொண்டார்.

    இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.

    • பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
    • இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

    இந்த வேப்பமர இலைகள் சாய்பாபா அருளால் கசப்புத் தன்மையை இழந்ததாக கூறப்படுகிறது.

    பாபா ஷிர்டியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்.

    அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது.

    இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

    மூன்று முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள்.

    தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள்.

    • இந்த வேப்பிலை மிகவும் இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.
    • அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருந்தது.

    சிறுவனின் தியானம் பற்றி கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கே கூடி நிற்க,

    இந்த செய்தி கேள்விப்பட்டு ஊர் தலைவர் பாட்டியா அங்கே வந்து சேர்கிறார்.

    அந்த சமயம் அந்த பாலகன் கண் விழித்து வேப்ப இலைகளை சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்த கங்காபாய்

    தன்னுடைய தாய்மை உணர்வு உந்தப்பட்டு, அந்த பாலகனுக்கு உணவை தயாரித்து எடுத்து வருகிறார்.

    தான் கொண்டு வந்த உணவை அந்த சிறுவனை சாப்பிடும்படி கங்காபாய் வேண்டி நிற்க,

    அந்த பாலகனோ மறுத்து இந்த வேப்பிலையே தனக்கு உணவு என்று சொல்லி மேலும் அது மிகவும்

    இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.

    இதனை கேட்டு திடுக்கிட்ட கங்காபாய் தனக்கும் சில இலைகளை தரும்படி கேட்டு வாங்கி சுவைக்க

    அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருக்க, அந்த தருணத்தில் ஊர் பூசாரி

    மகல்சாபதியும் வந்து வாங்கி உண்டு மகிழ்ந்து இருந்த நிலையில், ஊர் தலைவர் பாட்டியாவிற்கு

    கொடுக்கப்பட்ட இலைகள் அவரது உள்ளம் போலவே மிகவும் கசப்பு சுவையுடன் இருக்கிறது.

    பாட்டியா அந்த பாலகனை போலி மந்திரவாதி என்று நினைத்து கடும் சொற்களால் திட்டி ஊரை விட்டு துரத்தும் படி கட்டளையிடுகிறார்.

    அன்று இரவு பெருமழையும், பேரிடியுமாக இயற்கை பெரும் தாண்டவம் ஆட, அந்த பாலகன் நிலை குறித்து

    கவலை கொண்டவளாய் கங்காபாய் வீட்டின் ஜன்னல் வழியே வெளியே பார்க்க அங்கே ஒரு அற்புத காட்சியை காண்கிறாள்.

    வேப்ப மரத்தின் முன் நிலம் இரண்டாக பிளக்க, அந்த பாலகன் பூமி உள்ளே சென்று பின்

    பூமி பழைய நிலைக்கு சமமாக மாறுவதைக் கண்டு வணங்குகிறாள்.

    • சீரடி இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.
    • அந்த முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்

    கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை

    ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.

    சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.

    இன்றைக்கு நாடி வந்தோர் அனைவருக்கும் நல்லன எல்லாம் வழங்கும், தினம் தினம் அற்புதங்கள் நடக்கும்

    சீரடி புண்ணிய ஷேத்திரம் 1853ம் ஆண்டில் வெறும் 500 வீடுகள் மட்டும் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும்.

    குக்கிராமத்தின் ஊர் தலைவர் பாட்டியா என்ற நாத்திகர்.

    சீரடி விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி பெரும்பாலனவர்கள் ஏழ்மை நிலையில் வாழும் கிராமம்.

    இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.

    அக்கிராமத்தில் 60 வயது மதிக்கதக்க ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள்.

    அவள் பெயர் கங்காபாய். அவளது வீடு ஊரின் நடுவில் ஒரு வேப்பமரத்துடன் இருந்தது.

    அவள் கணவன் காலமாகி பல வருடம் ஆகி இருந்தது.

    அவளது மகன் சிறு வயதிலேயே காணாமல் போய் இருந்தான்.

    யாரும் ஆதரவற்ற மனிதர்களுக்கு கடவுளே ஆதரவு என்பது போல கங்கா பாய்க்கு ஒரு சம்பவம் நடந்தது.

    ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கங்காபாய் வீட்டின் முற்றம் சுத்தப்படுத்தி கோலமிட வெளியே வருகையில் ஒரு அற்புத தரிசனத்தை கண்டார்.

    அவரது வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் பக்கிரி தோற்றத்தில் ஒரு 16 வயது மதிக்கத்தக்க பாலகன் ஒருவன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான்.

    அவனுடைய முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!

    அந்த பக்கிரி தோற்றத்தில் இருந்த பாலகனே இன்று உலகம் முழுமைக்கும் கடவுளாக வணங்கும் சத்குரு ஸ்ரீ சீரடி சாய்பாபா

    • கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
    • மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    திருப்பூர்:

    கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ெரயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு- சாய்நகர் ஷீரடி (06903) பாரத் கவுரவ் ெரயில் வருகிற 26-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 11:10 மணிக்கு ஷீரடி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    இந்த ெரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், தர்மாவரம், குண்டக்கல், மந்தராலயம் சாலை, ராய்ச்சூர், வாடி, சோலாப்பூர், டான்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
    • சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

    சேலம்:

    சேலத்தை சேர்ந்த சாய்பாபா பக்தர் கனகசபாபதி (வயது 82). இவர் மலையேறும் பயிற்சி கிளப் தலைவராகவும் உள்ளார்.

    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் தினந்தோறும் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

    இந்தநிலையில் அவர் சேலத்திலிருந்து சீரடிக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சேலத்தில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாநிலங்களை கடந்து 22-ந் தேதி சீரடியை அடைந்தார்.

    மொத்தம் 1,207 கிலோமீட்டர் தொலைதூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    தனது பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்பிய கனகசபாபதிக்கு கிளப் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்து டன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பல வருடங்களாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இளைஞரிடையே சைக்கிள் பயணம் குறித்து விழிப்பு ஏற்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் இளைய சமுதாயத்தினர் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. உற்சாகமான வாழ்விற்கு சைக்கிள் பயணம் அவசியம் என்றார்.

    • ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
    • கோவில் அறக்கட்டளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

    ​​ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது.

    இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சவுத் ஸ்டார் என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது.
    • அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    திருப்பூர்:

    மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரெயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 13ந் தேதி நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு தனியார் ெரயில் சவுத் ஸ்டார் என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது.

    பயணிகள் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்டு 5-ந்தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு ரெயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம்.ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனர்.

    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

    வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.

    சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

    மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

    நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

    அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

    நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.

    பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

    ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

    காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.
    ×