search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sandalwood"

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் சோதனை சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் படி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டுபழனி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையி லான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

     அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 7 கிலோ எடையுளள சந்தர மரக் கட்டைகள் துண்டு துண்டாக இருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், புதுவை மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பரமணி (வயது 52) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பையை எடுத்துச் சென்று பனையபுரம் பெட்ரோல் பங்க் அருகில் நிற்பவர்களிடம் அளித்து வந்தால் கூலி தருவதாக ஒருவர் கூறியதும், அதனால் இந்த பையை சுப்பரமணி எடுத்து வந்ததும் போலீ சாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.

    மேலும், சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.

    விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதைப்போல் நேற்று விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்று. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தக்கர் கோவிந்தராஜன், சாமிநாதன், தலைவர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரமேஷ், குருக்கள் இசைசுந்தர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
    • சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • சந்தன மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
    • பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466- வது ஆண்டு கந்துாரி விழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 3-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டளை அரைத்து வருகின்றனர்.

    நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2- ம் தேதி ஒப்படைக்கப்படும்.

    தொடர்ந்து நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 3 -ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • கமுதி அருகே சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் பாரம்பரிய நடனம் ஆடி இளைஞர்கள் அசத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மகான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பள்ளி வாசல் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. அப்போது இளைஞர்கள், பெரிய வர்கள், சிறுவர்கள் சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடலுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

    களிகம்பு நடனத்தில் முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனமாடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.

    • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

    தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

    இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

    பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனமிட்ட கொடிமர திருவிழா நடந்தது. இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.

    மேளதாளம் முழங்க அய்யூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    ஜமாத் தலைவர் அப்பாஸ், செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் கமர்தீன், துணைத் தலைவர் முகமது சலீம், துணைச் செயலாளர் அபுதாஹீர் அசன், ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர், ஊர் நாட்டாமை கதிரேசன் மற்றும் ஊர் பெரியவர்கள், கிராம மக்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.

    • சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (35), வீரையன்(எ) காளிமுத்து, ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.  

    • ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×