search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samajwadi"

    மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில், மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்களுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தம், பணவீக்கம் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளில் பாஜக தலைவர்கள் அடிப்படையற்ற அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி உ.பி. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார். ஆனால், மாநில அரசு சிறப்பான எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.

    யோகி அரசு ஏழை விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. ஏற்கனவே 15 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டணத்தை மாநில அரசு இன்னும் வழங்காமல்  இழுத்தடித்து வருகிறது. 15 நாட்களில் விவ்சாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதியளித்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congress #SamajwadiParty
    லக்னோ:

    மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஜனதா, சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.


    இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் கூறுகையில், இந்த கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற மூத்த தலைவர்கள் கூறுகையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்.

    கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதால் அந்த கட்சிக்கே பேச்சு நடத்த முன்னுரிமை அளிக்கிறோம் என்றனர். #AssemblyElection #Congress #AkhileshYadav #SamajwadiParty
    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.
    லக்னோ:

    2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்தியில் இருந்து பா.ஜ.க. ஆட்சியை தூக்கி எறிய திட்டமிட்டுள்ளன. இதற்காக, மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்டரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றன.

    இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது செய்து கொண்ட தொகுதி உடன்பாட்டு விகிதாச்சாரத்தில் தற்போது தொகுதிகளை ஒதுக்க இயலாது. காரணம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரதான கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டரிய லோக்தளம் ஆகிய கட்சிகளுக்கும் இந்த முறை தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டியுள்ளது.

    மேலும், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் 85 சதவீத வாக்கு வங்கியை மையமாக வைத்து தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.

    வழக்கமாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கும் அடித்தட்டு வாக்காளர்கள் கூட மேல்தரப்பு மக்கள் கட்சி என அறியப்படும் காங்கிரசுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததால் தங்களை ஆதரிக்கவில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது கருதுகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ராசியான ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை தவிர வேறெந்த தொகுதியையும் இந்த பாராளுமன்ற தேர்தலில் விட்டுத்தர முடியாது என கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளில் மட்டும் போட்டி வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். #2019polls #SPCongresss #upseatsharing
    4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. #ByPoll
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு ஆதரவு அளித்தன.

    கைரான தொகுதியில் வென்ற தபசும் ஹசன்

    இந்நிலையில், கைரானா தொகுதியில் தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக உறுப்பினர் மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பந்தாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி முகத்தில் உள்ளார்.

    இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.

    தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.

    மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகிதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. #bypoll
    ×