search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Safety"

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது, கடந்த ஆண்டு சாலை விபத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அது உங்கள் கையில் தான் உள்ளது. மிதவேகம் மிக நன்று, என்ற கருத்தை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றனர். முடிவில் விவசாய ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் இன்று போக்குவரத்துத்துறை சார்பாக அமைச்சர் முர்த்தி சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு பொது மக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 11.01.2023 முதல் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் தொடங்கி கே.கே நகர் தோரண வாயில் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில் நாதன், வட்டார போக்கு வரத்து அலு வலர்கள் சிங்கார வேலன், சித்ரா உள்பட வட்டார போக்கு வரத்து ஆய்வா ளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    முசிறி:

    சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு, முசிறி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஹெல்மெட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    கோட்டாட்சியர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 38) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பென்னாத்தூரில் இருந்து பைக்கில் அரியூர் நோக்கி வந்தார்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் சாம்ராஜ் பலத்த காயம் அடைந்தார்.

    அரியூர் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு பகுதியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜகவினர் சார்பில் விவேகானந்தர் 160-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    இவ்விழாவில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலாளர் தண்டபாணி எஸ். எஸ்.டி. பிரிவு தலைவர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.

    முதலில் பாக்கம் பகுதியில் இருந்து தென்புதுப்பட்டு வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தொடர்ந்து தென்புதுப்பட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பென்சில் பேனா உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    ்நிகழ்ச்சியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் தென்புதுபட்டு கிராம பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ெஹல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மேலாண்மை இயக்குனர் மோகன் தலைமை தாங்கினார். மாநகர துணை கமிஷனர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (போக்குவரத்து) நவாஸ்கான், நிர்வாகிகள் சுப்பிரமணி, சசிகுமார், சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி வண்ணார்பேட்டை பணிமனை முன்பிருந்து தொடங்கி மாநகர பகுதி முழுவதும் சென்றது.

    இதில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ெஹல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

    • வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம்
    • கலெக்டர் வழங்கினார்

    வாணியம்பாடி:

    2023 முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

    இதனை ஒட்டி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் பகுதியில் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் டோல்கேட் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு பட்டை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட ராகவன், விஜயகுமார், அமர்நாத் உள்ளிட்டோரும் வாணிய ம்பாடி சரக போலீசாரும் கலந்து கொண்டனர்.

    • நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
    • பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் என்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் கலந்து கொண்டார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்க டேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன்கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது, சாலையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

    ஆர்.என்.ஆர். டிரான்ஸ்போர்ட் மாதவன், சாலை ஆலோசகர் ராஜேஷ், மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர் செல்வராஜ், என் .எஸ். எஸ். திட்ட அலுவலர் சந்துரு மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். முடிவில் துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    • திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்தார். ராம்நகரில் இருந்து ராமேசுவரம் சாலையில் பஸ் நிலையம் வழியாக பேரணி சென்றது. இதில் பங்கேற்றவர்கள் கடவுள் வேடம் அணிந்து தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    • அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
    • குறுகிய வழித்தடங்களை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது. அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது.

    சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாகைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். செங்கல்பட்டு -திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அறிவுறுத்தும் பொருட்டு குழுவில் பகிரவும் அவர்களை கண்காணிக்கவும் வாட்ஸ் அப் குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏ. எஸ் .பி அபிஷேக் குப்தா ., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ,நெடுஞ்சாலை ரோந்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்ளிட்டார் பலர் கலந்து கொண்டனர்.

    ×