search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு வார விழா
    X

    சாலை பாதுகாப்பு வார விழா

    • வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம்
    • கலெக்டர் வழங்கினார்

    வாணியம்பாடி:

    2023 முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

    இதனை ஒட்டி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் பகுதியில் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் டோல்கேட் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு பட்டை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட ராகவன், விஜயகுமார், அமர்நாத் உள்ளிட்டோரும் வாணிய ம்பாடி சரக போலீசாரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×