search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.

    ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    • நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
    • பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் என்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் கலந்து கொண்டார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்க டேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன்கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது, சாலையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

    ஆர்.என்.ஆர். டிரான்ஸ்போர்ட் மாதவன், சாலை ஆலோசகர் ராஜேஷ், மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர் செல்வராஜ், என் .எஸ். எஸ். திட்ட அலுவலர் சந்துரு மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். முடிவில் துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    Next Story
    ×