search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா
    X

    முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா

    • முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    முசிறி:

    சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு, முசிறி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஹெல்மெட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    கோட்டாட்சியர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×