search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி பெயிண்டர் பலி
    X

    லாரி மோதி பெயிண்டர் பலி

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 38) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பென்னாத்தூரில் இருந்து பைக்கில் அரியூர் நோக்கி வந்தார்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் சாம்ராஜ் பலத்த காயம் அடைந்தார்.

    அரியூர் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×