search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road block"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    சுடுகாட்டு சாலையை உரியவர்களிடம் பேசி இடத்தை பெற்று அளந்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வலங்கைமானில் மண்டல வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முதல் நிலைக் காவலர் கல்யாணசுந்தரம், ஆலங்குடி ரெவின்யு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் நவீன், பாலசுப்ரமணியம் தாலுக்கா ஆபீஸ் அலுவலர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு ராஜா , ரங்கராஜன், மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிமடம் அருகே தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சரியான முறையில் வரவில்லை, தொடர்ந்து மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவதாகவும், துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும், தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேரூராட்சி தலைவர் மார்க்ரேட் எலிசபெத் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலையில் பாளையம் கிராமத்திலுள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையறிந்த கிராம மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் முத்துசாமி (60) என்பவர் சாலையோரம் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் தாசில்தார் நூர்ஜஹானிடம் மனு அளித்தனர்.

    • சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுல்தான்பேட்டையிலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் அமர்ந்து, குடிநீர் சீராக விநியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் , திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் , மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி முத்துபரமேஸ்வரி , மங்கலம் வருவாய்த்துறை அதிகாரி கலையரசன் மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சமத்துவபுரம் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவ புரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மேற்கண்ட வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. எனவே சமத்துவ புரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆதித்த னேந்தல் சமத்துவபுரத்தில் வீடுகளை புனரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படிய அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி பரா மரிப்பு பணிக்கு போதாது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவ புரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் இன்று காலை நரிக்குடி-ராமேசு வரம் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் ெதாடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    • பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எடப்பாடி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதலமைச்சருக்கு அளித்திருந்தார்.

    அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.

    இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது.

    முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிரா மத்தில் மேட்டுத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தா சலம்- சிதம்பரம் சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இன்னும் சில நாட்களில், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலை யில் போக்குவரத்து சுமார் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் மாற்றி கொடுத்ததை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கியதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து துணை தலைவர் மாலதி ராஜேந்திரன் ஆதரவாக தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தா.பழூர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
    • இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.

    • குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
    • அம்பேத்கர் நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவிற்கு குடிதண்ணீர் கடந்த ஒரு வாரமாக சப்ளை செய்யப்படவில்லை.

    அதாவது பொது குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

    இது தொடர்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் கலியன் என்பவரிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, அவர் பொதுமக்களிடம் சரியான பதிலைத் தராமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் பிரபு, ஊராட்சி செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் தனஞ்ஜெயன் மற்றும் அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டரை மாற்றி விடுவதாகவும், உடனடியாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.

    இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    • இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.
    • தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது அழகாபுரம் ரோட்டுத்தெரு. இப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து  நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மோட்டார் பழுதடைந்து மோட்டார் பழுது நீக்க எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை திரும்ப அப்பகுதிக்கு மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்நேற்று திடீரென காலி குடங்களுடன் சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் அழகாபுரம் ரோட்டு தெரு குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ெபாது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


    பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செய ற்குழு விஎஸ்.கலிய பெருமாள், என்.ராதா, எஸ்.இளங்கோவன், காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரசு அதிகாரிகள் கோரி க்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில்எழுத்து ப்பூர்வமாக எழுதி வாங்க ப்பட்டு போராட்டம் தற்காலி கமாக ஒத்திவை க்கப்பட்டது.

    ×