search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

    • குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிரா மத்தில் மேட்டுத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தா சலம்- சிதம்பரம் சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இன்னும் சில நாட்களில், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலை யில் போக்குவரத்து சுமார் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×