search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulation Shop"

    • ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.

    16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது.
    • காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை2,667 கிலோ.முத்தூா், காங்கயம் பகுதிகளை சோ்ந்த 5 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.93 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது.
    • தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    மூலனூர்:

    தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் திருப்பூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 233 விவசாயிகள் 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இந்த ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

    • சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது.
    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இது மாநிலத்தின் முக்கிய கொப்பரை விற்பனை மையமாகும். இங்கு சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது. எனவே, விவசா யிகள், வியாபாரிகள் செவ்வா ய்க்கிழமை வரவே ண்டாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அடுத்த வாரம் வழக்கம்போல செயல்படும் என விற்பனைக் கூட அதிகாரி மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா்.
    • வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 609 விவசாயிகள் தங்களுடைய 5,431 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.

    மொத்த வரத்து 1,729 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 7,150 முதல் ரூ. 10,629 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,250. கடந்த வார சராசரி விலை ரூ. 9,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.38 கோடி.விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும்.

    உடுமலை:

    வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கடலை தேவை அதிகம் இருக்கிறது.இதனைக் கருத்தில் கொண்டு ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பச்சை நிலக்கடலையை வாங்கி வந்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட உலர்களங்களில் காய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-உடுமலை மட்டுமல்லாமல் காங்கேயம் பகுதி எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கடலை பருப்பு தேவை அதிகம் இருக்கிறது.எனவே நிலக்கடலையை வாங்கி வந்து காய வைத்து தோல் நீக்கி பருப்புகளாக்கி விற்பனை செய்து வருகிறோம்.நல்ல வெயில் காலத்தில் ஒரு சில நாட்களில் பச்சைக்கடலை நன்கு காய்ந்து விடும்.ஆனால் தற்போதைய பருவநிலையில் நன்கு காய்வதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்வதால் கடலை நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதுள்ளது.நிலக்கடலைக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் நல்ல மண் வளம் உள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.அதற்கான சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர்.

    ×