search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rafael nadal"

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் 
    பாசிலாஷ்விலியும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை  கைப்பற்றினார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

    காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன்  மோதுகிறார். #USOpen2018 #RafaelNadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவை விழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் கச்சனோவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ரபெல் நடால் சுதாரித்துக் கொண்டு தனது அதிரடியை ஆரம்பித்தார். அதனால் இரண்டாவது செட்டை 6 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் கச்சனோவ் நடாலுக்கு கடும் சவாலாக விளங்கினார். மூன்றாவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும் ரபெல் நடால் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ரபெல் நடால் 5 - 7, 6 - 5, 7- 6, 7 - 6 என்ற கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup #Tsitsipas #RafaelNadal
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 - 2 என எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #RogersCup #Tsitsipas #RafaelNadal #SimonaHalep
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.



    சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.

    முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.



    பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

    மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 
    ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். இதில் நடால் 2-6, 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கரென் கஜோனோவ் (ரஷியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டெபின்ஸ் (கிரீஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogersCup #RafaelNadal
    இன்று வெளியிடப்பட்ட ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். #Nadal
    டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான சங்கம் (ATP) இன்று உலக டென்னிஸ் தர வரிசையை வெளியிட்டது. இதில் ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் 9310 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

    சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7080 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் 5665 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ 5395 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 4655 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    டிமிட்ரோவ், மரில்ன் சிலிச், டொமினிக் தியெம், ஜான் இஸ்னெர், நோவக் ஜோகோவிச் முறையே 6 முதல் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால் பெயரில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. #Nadal
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகின் நம்பர்-1 வீரராக திகழ்ந்து வருகிறார். 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள நடால், செம்மண் தரையில் முடிசூடா மன்னராவார்.

    இவரது சாதனையை புகழும் வகையில் ரபா நடால் (Rafa Nadal ) என்ற ஏடிபி சேலஞ்சர் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் நடாலின் சொந்த ஊரான மல்லோர்கா தீவில் அமைந்துள்ள மனாகோர் நகரில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது.



    அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடால், டென்னிஸ் போட்டி குறித்து கூறுகையில் ‘‘என்னுடைய நோக்கம் எல்லாம் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு வாரமும் போட்டிக்கு தயாராகி வருகிறேன். வெற்றி பெற்றால் சிறப்பானது. விளையாட்டில் வெற்றி என்பது ஒரு சாராம்சம். ஆனால் வெற்றிக்காக போராடியது சிறப்பானது’’ என்றார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலுடன் செர்பியா வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனும், (தென்ஆப்பிரிக்கா)- 9-ம் நிலை வீரர் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றதில்லை. இதில் ஆண்டர்சன் கடந்த ஆண்டு அமெரிக்க ஒபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.

    நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை கால் இறுதியில் வீழ்த்திய ஆண்டர்சன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    இரவு 7.30மணிக்கு மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள நடால் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6-வது முறையாக தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் விம்பிள்டன் பட்டத்தை (2008, 2010) 2 முறை கைப்பற்றி உள்ளார். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ஜோகோவிச் கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    12 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை தகுதி பெற்று உள்ளார். அதில் 2011, 2014, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் கடந்த ஆண்டு கடும் சறுக்கலை சந்தித்தார். அதில் இருந்து மீண்டும் தற்போது விம்பிள்டன் அரை இறுதியை எட்டி உள்ளார். இருவரும் இதுவரை 51 முறை மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 26 தடவையும், நடால் 25 தடவையும் வெற்றி பெற்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜாம்பவான் நடால் 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #Wimbledon2018 #Nadal
    டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.

    32 வயதாகும் ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.



    நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal

    ஸ்டட்கர்ட்:

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 24-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசுடன் மோதினார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெடரர்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெடரர் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொள்கிறார்.

    நேற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 36 வயதான பெடரர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் பெடரர் முதலிட அரியணையில் ஏறுவார். ஸ்பெயினின் ரபெல் நடால் 2-வது இடத்துக்கு இறங்குவார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal 
    20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ள பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை என நடால் கூறியுள்ளார். #RogerFederer #RafaelNadal

    உலகின் நம்பர்-1 வீரரான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறை யாக கைப்பற்றி சாதித்தார். ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பெற்றுள் £ர். ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ளார். அவ ருக்கு அடுத்தப்படியாக நடால் உள்ளார். பெடரரின் சாதனையை நடால் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறிய தாவது, ‘பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்க வில்லை. என்னை பொறுத்த வரை டென்னிஸ் மிகவும் முக்கியமானது தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. எனது உடல் தகுதி இருக்கும் வரை ஆடுவேன்’ என்றார். #RogerFederer #RafaelNadal

    ×