search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tsitsipas"

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எமில் ரூசுவோரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-7 (10-12), 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 3 சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்,

    கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 3-6 என இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-2, 6-2 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சீனாவின் ஜாங் ஜீஜெனுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 6-1 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்குடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் இரு செட்டை 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றினார். 3-வது செட்டை டேனியல் 7-6 (7-2) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 4-வது செட்டை 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
    • பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அவர் 2வது செட்டை 5-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இறுதியில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
    • இதில் கிரேக்க வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார்.

    இதில் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அத்துடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • நார்வே வீரர் காஸ்பர் ரூட் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் செர்பிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், செர்பிய வீரர் டுசான் லஜோவிக்குடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு சுற்றுகளில் 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இரண்டாவது அரையிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்டினுடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ், காஸ்பர் ரூட் ஆகியோர் மோதுகின்றனர்.

    • சிட்சிபாஸ் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னரை 2-1 என வீழ்த்தியிருந்தார்.
    • காஸ்பர் ரூட் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை 2-1 என வீழ்த்தியிருந்தார்.

    மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் 8-ம் நிலை தரநிலை வீரரான நார்வேயினி் காஸ்பர் ரூட்- 12-ம் தரநிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    தரநிலையில் 1-ம் இடம் பிடித்திருந்த ஜோகோவிச்சை வீழ்த்தி ரூட், 2-ம் நிலை வீரர் சின்னரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ்க்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

    ஆனால் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரூட் அரையிறுதியில் ஜோகோவிச்சை 6-4, 1-6, 6-4 என வீழ்த்தியிருந்தார். சிட்சிபாஸ் சின்னரை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் தோல்வி அடைந்தார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், கிரீஸ் வீரட் சிட்சிபாசுடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். முதல் செட்டை ரூட் 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ரூட் ஆதிக்கம் செலுத்தினார். ஆகையால் 3-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி 2-1 என ரூட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் கச்சனோவுடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், டென்மார்க் வீரர் ரூனேவுடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 7-6 (8-6) என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டினுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×