search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Relations Camp"

    • சக்கந்தி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:-

    சிவகங்கை வட்டம் சக்கந்தி கிராமத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். சக்கந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை திருவாவடுதுறை கிராம ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் திருவாவடுதுறை கிராம ஊராட்சி, நடராஜ சுந்தராம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் கலந்து கொண்டு 165 பயனாளிகளுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாம் என்பது தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மனுநீதி நாள் முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டங்களை கவனித்து பயனடையவும், மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும், இத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் இத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.

    இங்கு பயனாளிகளுக்கு உதவிகள் கொடுத்திட மட்டுமல்லாமல் பொது மக்களாகிய உங்களின் உரிமைகளை எங்களிடம் கேட்டு நலத்திட்டம் பெற வேண்டும் என்பதனை உங்களுக்கு உணர்த்திடவும் வந்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

    மக்கள் தொடர்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டு 94 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்க ப்பட உள்ளன. மீதமுள்ள 43 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்யு ரேகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.
    • 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரடிவாவி ரங்கசாமிகவுண்டர் மண்டபத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். விழாவில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-

    சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுயஉதவிக்குழுக்கள் குறைவாக உள்ளதால், மேலும், சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும். அந்த வகையில் கரடிவாவியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 11 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 250 மதிப்பில் கணினி புதிய குடும்ப மின்னணு அட்டை, 20 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 207 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 452 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் சார்பில், 3 பேருக்கு ரூ.75 ஆயரம் மதிப்பிலும், இலங்கை தமிழர் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.90 ஆயிரத்து 570 மதிப்பில் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.
    • துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு 52 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து தங்கள் துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    • முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.
    • பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் வரவேற்றார். இதில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி வாய்ந்த 21 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 6 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    • மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • முகாமில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில், முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்றார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், அட்மா வேளாண் குழு தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், கலந்துகொண்டு திட்ட விளக்க உரை நிகழ்த்தினர்.

    முகாமில் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, பட்டா மாற்றம், தோட்டக்கலைத் துறை வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 177 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 மனுக்கள் விசாரணையில் உள்ளன. சுய உதவி குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் இயற்கை வளம் மிகுந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள், சத்தான உணவு வகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர், எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வேளாண்மை துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    • கிழவயல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அருள் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

    இம்முகாமில் கணினி திருத்தம், முதியோர் ஊக்கத்தொகை வழங்குதல், பட்டா வழங்குதல் போன்ற பலதரப்பட்ட மனுக்கள் கோரிக்கைகளாக கிராம மக்களிடம் பெறப்பட்டது. அதில் உடனடியாக 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நடைபெற்ற இம்மாமில் ஒன்றிய கவுன்சிலர் சிங்காரம், வட்டாட்சியர் கயல்விழி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தாசில்தார் நந்தகோபால், கணபதி பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக.

    பொறுப்பாளர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா, தீயணைப்பு அலுவலர் சுரேஷ் குமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×