search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம்
    X

    பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட காட்சி.  

    பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம்

    • முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.
    • பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் வரவேற்றார். இதில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி வாய்ந்த 21 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 6 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    Next Story
    ×