search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணபதிபாளையத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 54பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    கணபதிபாளையத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 54பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    • 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தாசில்தார் நந்தகோபால், கணபதி பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக.

    பொறுப்பாளர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா, தீயணைப்பு அலுவலர் சுரேஷ் குமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×