search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மக்கள் தொடர்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

    திருப்பூர் மக்கள் தொடர்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

    • மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.
    • துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு 52 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து தங்கள் துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    Next Story
    ×