search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "practice"

    • தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னிமலை,

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதுறை சார்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை அடுத்துள்ள மைலாடி பகுதியில் நடந்தது.

    இதில் சென்னிமலை வட்டாரத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜர் நகர், மற்றும் திப்பம்பாளையம், ஆகிய குறுவளமையங்களில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படு த்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.

    வட்டார கல்வி அலுவலர்கள் செ.ராஜேந்திரன், மு.செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள்.

    இப்பயிற்சியில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் செயல்பட்டு பயிற்சி சிறப்பாக நடை பெறுவதை பார்வையிட்டனர்.

    இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ராதாகி ருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரி யர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • அறக்கட்டளை பொறுப்பாளா் ரவிகுமாா் தலைமை வகித்தாா்.
    • பறையிசை, தேவராட்டம், சுடுமண் பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

    அவிநாசி:

    உலகின் தலைசிறந்த ஓவியா்களில் ஒருவரான ராஜாரவிவா்மா பிறந்த நாளை முன்னிட்டு அவிநாசியில் ஓவியம், பறையிசை, தேவராட்டம், சுடுமண் பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

    அவிநாசி 'நல்லது' நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் அலுவலக கட்டடத்தில் நடைபெறும் இப்பயிற்சிகளை பொறுப்பாளா்கள் சென்னியப்பன், அந்தோனிசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். அறக்கட்டளை பொறுப்பாளா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் சாய் கண்ணன், சதீஷ்குமாா், திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவிநாசி ஓவிய ஆசிரியா் வாரணவாசி ஓவிய பயிற்சியளித்தாா். தேவராட்டம், பறையிசை, சுடுமண் பொம்மைகள் தயாரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து தஞ்சாவூா்அறிவழகன் பயிற்சியளித்தாா்.

    20 நாட்களுக்கு காலை 10 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சியில் 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறக்கட்டளையினா் தெரிவித்தனா்.

    • மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
    • பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு) பொது செயலாளர் ஆறுமுகம், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்ட பின், பென்ஷனர்கள், குடும்ப பென்ஷனர்கள், தங்கள் மருத்துவ செலவுக்கான முழுத் தொகையை பெற முடிவதில்லை.மிக குறைந்த மாத பென்ஷன் பெறுபவர்கள், மருத்துவ செலவு காப்பீடுக்கு மாத தவணையாக 497 ரூபாய் செலுத்துவது கடினம். ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் படி, விருப்பமுள்ளவர்களை மட்டும் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    இதற்கு பதிலாக பென்ஷனர்கள் அருகேயுள்ள அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட தங்களுக்கு உகந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவினங்களை திரும்ப பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.பென்ஷனர்கள் இறக்கும் போது வழங்கப்படும், ஈமகிரியை செலவின தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் 75 வயது கடந்தவர்களுக்கு, 15 சதவீதம் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
    • வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் மீட்கும் முறை பற்றியும் உள்ளிட்ட செயல்முறை கருவிகளோடு பயிற்சியளித்தனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு வளைகோல் பந்து பயிற்சி நாளை தொடங்குகிறது.
    • மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-252947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை வளை கோல்பந்து பயிற்சிக்கான எஸ்.டி.எ.டி. விளையாட்டு இந்தியா மாவட்ட மையம் மாவட்ட விளையாட்டரங்கம் விருதுநகரில் செயல்பட உள்ளது.

    இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் வரை சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலையில் பயிற்றுநரால் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.இத்திட்டத்தில் சேருவதற்கான மாவட்ட தேர்வு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்ட ரங்கில் நடக்கிறது.

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-252947 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார்.

    • “சி “ அகாடமியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலை காவிரி நகர் விரிவாக்கம், பி.கே.ஆர்கேடு காம்ப்ளக்சில் '' சி" அகாடமி செயல்பட்டு வருகிறது.

    இந்த "சி " அகாடமியில் இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் - 2023 பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    "சி" அகாடமி முதன்மை அலுவலர் காயத்ரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் -2023 பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சிக்கு தேவையான புத்தகக் கையேடு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மாணவ பருவம் மிகவும் மகிழ்ச்சியான பருவம். கவலைகள் இல்லாத பருவம். சவால்கள் சில இருந்தாலும் அதையும் தாண்டி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை மாணவர் பருவத்தில் கிடைக்கும்.

    வரக்கூடிய நீட் தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து மருத்துவராக வேண்டும்.

    தலைசிறந்த மனிதநேயமிக்க மருத்துவராக திகழ வேண்டும்.

    தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியின் படித்தால் வெற்றி நிச்சயம். முதலில் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

    தேர்வுக்கு இன்னும் 30 நாட்கள் தான் உள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியம்.

    நேரத்தை வீணாக்காமல் படிக்க வேண்டும்.

    செல்போன் , டி.வி. பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் அனைவரையும் நான் மருத்துவராக தான் பார்க்க வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.

    படிக்கும்போது மன அழுத்தம் தேவையில்லை.

    மனதை ஒருமுகப்படுத்தி நன்றாக படியுங்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தாசில்தார் சக்திவேல் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினர்.

    இதையடுத்து "சி " அகாடமி நிறுவன இயக்குனர் ஸ்ரீராமுலு பேசும்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மையத்தில் படித்த மூன்று பேர் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.

    2021-ம் ஆண்டு 5 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு கலெக்டர் பேசிய தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தேர்ச்சி வீதம் அதிகரித்து 23 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த ஆண்டு கலெக்டர் பேசிய ஊக்க வார்த்தைகளால் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இதைவிட அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

    மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் பேசிய கலெக்டருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கும் நன்றிகள். அனைவரும் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
    • சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆப்த மித்ரா - பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளார்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியின் முதற்கட்டமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது 300 தன்னார்வலர்களுக்கு 9 கட்டங்களாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மூலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    இயற்கை பேரிடர்களின் போது அவசர சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு உதவி வழங்கிடவும், தன்னார்வ கலாச்சாரத்தை ஊக்குவித்திடவும் கடினமான சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு சேவை செய்திடும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பணிகள் மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் அடையும் வரை உடனடி பதில் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் அனைவரும் மனித நேயத்துடன் மற்றும் மதிப்புடனும் நடந்து கொள்ளவேண்டும். தேசியம், இனம், பாலினம், கருத்துக்கள் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான பாகுபாடு இல்லாமல் கடமைகளை மேற்கொள்ளவேண்டும். தன்னார்வ தொண்டு புரிதலின் அவசியத்தை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 300 தன்னார்வலர்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் 12 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, சிறந்த பயிற்றுநர்களால் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    அவர்கள் பயிற்சி பெற்றமைக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், ரெட் கிராஸ் சேர்மன் வரதராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிப்ரவரி 6 -ந் தேதி முதல் 11ஆம் தேதி வரை தினசரி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை சர்பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.நட்ராஜ் செய்திருந்தார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் நல வாரிய உறுப்பினர்களுக்கு இந்திய அரசு சிறு குறு தொழில் சம்பந்தமாக துறைவாரியாக இந்த மாதம் பிப்ரவரி 6 -ந் தேதி முதல் 11ஆம் தேதி வரை தினசரி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.நட்ராஜ் செய்திருந்தார்.

    • உடையார்பாளையம் ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது
    • ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் உள்ள வேலப்ப செட்டி ஏரியில் தேசிய பேரிடர் மீட்புகுழு மற்றும் இயற்கை பேரிடர் கான கூட்டு மாதிரி செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். இதில் தேசிய பேரிடர் மீட்பு குழு டீம் கமாண்டர் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டினார்.இந்த பயிற்சி முகாமில் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித், துணைத் தலைவர் அக்பர் அலி கலந்து கொண்டனர்.

    மேலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பேரூராட்சி நிர்வாக துறை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தேசிய மீட்பு குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் ஏரி, குளம், ஆறு உள்ளிட்டவற்றில் தவறி விழுந்த நபர்களை எப்படி மீட்பது, ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.மேலும் தவறி விழுந்தவர்களை எப்படி உயிர் காப்பது, அவர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பயிற்சியில் ஏராளமான தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நன்றி கூறினார்.


    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
    • பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தற்பொது பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித்தகுதியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20,000- த்தை தாட்கோ வழங்கும்.

    இப்பயிற்சியினை வெற்றி கரமாக முடிக்கும் பட்சத்தில் AASSC ஏ.ஏ.எஸ்.எஸ்.சி -யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சியினை பெற்றவர்கள் புகழ் வாய்ந்த தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.

    இதில் திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

    • 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தாலுகா உளூர் மேற்கு கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    உளூர் மேற்கு கிராமத்தில் நீண்ட நாட்களாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு, அவர்களின் கோரிக்கையை ஏற்று 16 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நத்தம் வகைப்பாடுடைய நிலத்தில் 0.16.0 ஏர்ஸ் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    ஓரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சியில் நரிக்குறவர் காலனி குடியிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் மேல்நிலைப்பள்ளி மேல உளூரில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், சீருடை போன்றவை வழங்கப்பட்டு இக்குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் '' ஊருக்கு ஒரு வனம்" திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஓரத்தநாடு தாசில்தார் சுரேஷ், ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவர் பார்வதி சிவசங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×