search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தும் பயிற்சி"

    • தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னிமலை,

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதுறை சார்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை அடுத்துள்ள மைலாடி பகுதியில் நடந்தது.

    இதில் சென்னிமலை வட்டாரத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜர் நகர், மற்றும் திப்பம்பாளையம், ஆகிய குறுவளமையங்களில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படு த்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.

    வட்டார கல்வி அலுவலர்கள் செ.ராஜேந்திரன், மு.செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள்.

    இப்பயிற்சியில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் செயல்பட்டு பயிற்சி சிறப்பாக நடை பெறுவதை பார்வையிட்டனர்.

    இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ராதாகி ருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரி யர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
    • இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பாக சென்னிமலை யூனியன், அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் தொடக்க பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.

    வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×