search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Pension"

    • மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
    • பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு) பொது செயலாளர் ஆறுமுகம், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்ட பின், பென்ஷனர்கள், குடும்ப பென்ஷனர்கள், தங்கள் மருத்துவ செலவுக்கான முழுத் தொகையை பெற முடிவதில்லை.மிக குறைந்த மாத பென்ஷன் பெறுபவர்கள், மருத்துவ செலவு காப்பீடுக்கு மாத தவணையாக 497 ரூபாய் செலுத்துவது கடினம். ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் படி, விருப்பமுள்ளவர்களை மட்டும் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    இதற்கு பதிலாக பென்ஷனர்கள் அருகேயுள்ள அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட தங்களுக்கு உகந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவினங்களை திரும்ப பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.பென்ஷனர்கள் இறக்கும் போது வழங்கப்படும், ஈமகிரியை செலவின தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் 75 வயது கடந்தவர்களுக்கு, 15 சதவீதம் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.
    • கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது.

    நெல்லை:

    அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு

    இந்த போராட்டத்திற்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜான் துரைச்சாமி தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் பாபு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் கூறியதாவது:-

    நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது. அந்த தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக சேர்த்திட வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வினை ரத்து செய்ய வேண்டும்.அதில் முறைகேடு உள்ளது.மேலும் பழைய பென்சன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் நாகராஜன், யோகநாதன், செல்வராஜ், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அனுமதி மறுத்ததால் ஆசிரியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றனர்

    ×