search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி  ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    X

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    • நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.
    • கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது.

    நெல்லை:

    அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு

    இந்த போராட்டத்திற்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜான் துரைச்சாமி தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் பாபு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் கூறியதாவது:-

    நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது. அந்த தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக சேர்த்திட வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வினை ரத்து செய்ய வேண்டும்.அதில் முறைகேடு உள்ளது.மேலும் பழைய பென்சன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் நாகராஜன், யோகநாதன், செல்வராஜ், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அனுமதி மறுத்ததால் ஆசிரியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றனர்

    Next Story
    ×