என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » portugal
நீங்கள் தேடியது "Portugal"
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #PORIRA
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 45-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரிகார்டோ குவாரஸ்மா ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ பயன்படுத்தவில்லை. அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
ஆட்டம் முடியும் வரை ஈரான் அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. எனவே போர்ச்சுக்கல் வெற்றி பெற்று விடும் நிலை இருந்தது.
கூடுதலாக கிடைத்த நிமிடங்களை ஈரான் அணி பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கரிம் அன்சரிபர்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது.
அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ரஷிய உலகக்கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல்லை சேர்ந்த அவர் உலக கோப்பையில் அபாரமாக ஆடி வருகிறார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். அடுத்து மொராக்கோவுக்கு எதிராக 1 கோல் அடித்தார். 4 கோல்கள் அடித்துள்ள அவர் இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோல் அடித்து முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனை முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
சோச்சி:
உலக கோப்பை கால் பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுக்கல் அணிகள் மோதின.
சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதாலும், போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ஏற்றாற் போலவே ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.
இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
உலக கோப்பை கால் பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுக்கல் அணிகள் மோதின.
சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதாலும், போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ஏற்றாற் போலவே ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.
இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார்.
மேலும் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #PORESP
சோச்சி:
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே, எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான், மொராக்கோவையும் வீழ்த்தின.
மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.
அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கொல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து, பெரு - டென்மார்க், குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PORESP
ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018
சோச்சி:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.
32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோதின.
இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் - போர்ச்சுக்கல் (பிபிலா) அணிகள் மோதும் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்தி வீரரும் கேப்டனுமான ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி அதிகம் நம்பி இருக்கிறது. மேலும் அந்த அணியில் புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரிரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா சில்வா, பியூ, ஜோர்டி அல்பா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இதனால் ஸ்பெயினின் அதிரடியை போர்ச்சுக்கல் சமாளிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரொனால்டோ தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவே - எகிப்து (ஏ) அணிகள் மோதுகின்றன. உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், கலாஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.
எகிப்து அணி முன்னணி வீரரான முகமது சலாவை நம்பி இருக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மொராசகோ - ஈரான் (பி) மோதுகின்றன. #FIFO2018
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.
32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோதின.
இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் - போர்ச்சுக்கல் (பிபிலா) அணிகள் மோதும் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்தி வீரரும் கேப்டனுமான ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி அதிகம் நம்பி இருக்கிறது. மேலும் அந்த அணியில் புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரிரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா சில்வா, பியூ, ஜோர்டி அல்பா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இதனால் ஸ்பெயினின் அதிரடியை போர்ச்சுக்கல் சமாளிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரொனால்டோ தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவே - எகிப்து (ஏ) அணிகள் மோதுகின்றன. உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், கலாஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.
எகிப்து அணி முன்னணி வீரரான முகமது சலாவை நம்பி இருக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மொராசகோ - ஈரான் (பி) மோதுகின்றன. #FIFO2018
சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.
அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.
விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.
அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.
விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X