search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police officer"

    சசிகலா விவகாரத்தில் தன் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறி உள்ளார். #Roopa
    பெங்களூரு:

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வழக்கப்பட்ட வழக்கை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் நடத்திய விசாரணை அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தற்போது தெரியவந்து உள்ளது.

    ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சசிகலாவின் வக்கீல் அசோகன், கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரூபாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    என் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

    இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என் கடமையை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்தது தொடர்பாக கர்நாடக உள்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa
    பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது தொடர்பாக நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். #Roopa #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    அதில், சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது உண்மைதான், பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    இதுசம்பந்தமாக போலீஸ் அதிகாரி ரூபா கூறியதாவது:-

    சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறேன். அது இன்னும் எனக்கு தரப்படவில்லை. முழுமையாகவும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அறிக்கையில் இன்னும் பல வி‌ஷயங்கள் வெளிவரலாம்.

    நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. விசாரணை ஆழமாகி ஊடுருவி நடத்தி இருக்கிறார்கள். ஜெயில் அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி பதிவு செய்திருந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சசிகலாவை முதல் வகுப்பு கைதியாக நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் முதல் வகுப்பு கைதி அல்ல. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தனி சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கும் வசதி, தனி பார்வையாளர் கூடம், படுக்கை அறை, எல்.இ.டி. டி.வி. என வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த பிரச்சினையால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். என்னை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் இதை நான் தண்டனையாக கருதவில்லை. அதே நேரத்தில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதை நல்ல வி‌ஷயமாக கருதினேன். இப்போது நான் கூறிய குற்றச்சாட்டின்படி உண்மை வெளிவந்துள்ளது.

    ஜெயிலில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் ஜெயில் விதிமுறைகளை மீறியது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கிய ஒருவருக்கு அதை முறையாக நிறைவேற்றாததால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகவும் இது உள்ளது.

    அப்போதைய ஜெயில் இயக்குனர், சசிகலாவுக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது தவறு என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ஜெயில் சூப்பிரண்டும் இதற்கு பொறுப்பானவர் ஆவார்.

    2014-ல் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தபோது இதே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததா? என்று எனக்கு தெரியாது. அப்போது நான் ஜெயில் அதிகாரியாக நியமிக்கப்படாததால் எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa #Sasikala
    குட்கா ஊழலில் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. #CBI #GutkhaScam

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்து கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு சரியாக அமல் படுத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் ரகசியமாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.டி.எம். குட்கா தயாரிப்பாளர் மாதவராவின் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள தயாரிப்பு ஆலைகள், சேமிப்புக் கிடங்குகளில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

    அதோடு ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அந்த டைரியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இருந்தன. லஞ்சம் பெற்றவர் பெயர், தொகை ஆகியவை தெளிவாக இருந்தன. தேதி வாரியாக இந்த தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

    வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது தமிழக அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் அடிக்கடி குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றிருப்பது உறுதியானது. அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த டைரி பக்கத்தை நகல் எடுத்து, தமிழக அரசுக்கு அனுப்பிய வருமான வரித்துறை, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

    ஆனால் அந்த டைரி பக்கத்தின் அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


    அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வருமான வரித் துறையினர், தமிழக போலீசார் சேகரித்திருந்த தகவல்களைப் பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். அதோடு சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த சோதனையின் பலனாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பல புதிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். சுமார் 25 பேர் வரவழைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, “இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் தெரிவிக்க” உத்தரவிட்டார். அதை ஏற்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 31 இடங்களில் சோதனை நடத்தியது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 165-ன் கீழ் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தின்படி மேலும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் கிடைத்தன.

    அதன் பேரில் 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இதில் குட்கா முறைகேடுகளில் தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பலரது வாக்கு மூலங்களும் அதை உறுதிபடுத்துவதாக இருக்கின்றன.

    உணவு பாதுகாப்பு, சுங்கத் துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு இருக்கிறது. சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கவும், தடையை மீறி குட்காவை விற்பனை செய்யவும் அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் ஆவணங்களை அழித்துள்ளனர். குற்றச்சாட்டை உறுதிப்படுத்த தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு சி.பி.ஐ. கூறி உள்ளது. சி.பி.ஐ.யின் இந்த தகவல் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீதான பிடியை இறுகச் செய்துள்ளது. #CBI #GutkhaScam

    அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை கூறினார். #Plasticban
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சணல், துணிப்பைகள் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணி மற்றும் சணல் பைகளை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:-



    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வீசி விடுவதால் அவை பூமியில் மக்காமல் அப்படியே இருந்து விட்டு சுற்றுப்புற சூழலை பாழாக்கி விடுகிறது.

    அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அதிக அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    அதற்கு மாற்றாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் எந்தவித கெடுதல் ஏற்படாது.

    இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர்கள் சிவசங்கரன், மோகனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Plasticban
    இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP
    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.

    அவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.

    போலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.

    ஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.

    டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.

    அப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    இருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.  #SupremeCourt #ActingDGP #Tamilnews 
    2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் நேற்று ஓய்வுபெற்றார். #Veerappan #Vijayakumar
    புதுடெல்லி:

    சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்-அமைச்சரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆனார்.

    அவர் போலீஸ் கமிஷனராக இருந்தபோது சென்னையில் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீஸ் கமிஷனராக இருந்த நிலையில் 2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண் டோ படையின் தலைவர் ஆனார். 2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

    2012-ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

    6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். #Veerappan #Vijayakumar #Tamilnews 
    ×