என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "participate"
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக பிரியா சிங் கூறியதாவது:-
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர். என் தந்தை கூலித் தொழிலாளி. அவரால் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
புதுச்சேரி:
புதுவை கவர்னராக கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பதவி ஏற்றார். கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2 ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார்.
கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த தகவலை நேற்று மாலை மத்திய பாரதீயஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிமிடம் கூட புதுவையில் பணிபுரியமாட்டேன் என கிரண்பேடி கூறிஇருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கவர்னர் கிரண்பேடி சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். அவரால் 2 ஆண்டுகள் புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை. என்னை தவிர அனைவருக்கும் விழாவுக்கு வரும்படி கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். தன்மானமுள்ளவர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி- முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மோதல் அவ்வப்போது உச்சகட்டத்தை எட்டுவதும், பின்னர் சமாதானமாகி விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களான நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், ஆகியோர்கள் கவர்னரிடம் சமரச போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் விழாவில் பங்கேற்க அமைச்ர்களுக்கு மட்டும் கவர்னர் கிரண்பேடி அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் விழாவில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ள நிலையில் நாளைய விழாவில் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்