search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participate"

    நாகர்கோவில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்றனர். #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.



    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்கு நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு உ.பி.யைச் சேர்ந்த இளம் வீராங்கனை கடிதம் எழுதி உள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.



    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக பிரியா சிங் கூறியதாவது:-

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர். என் தந்தை கூலித் தொழிலாளி. அவரால் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    இரண்டு ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை கொண்டாடுகிறார். இதில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:


    புதுவை கவர்னராக கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பதவி ஏற்றார். கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2 ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார்.

    கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த தகவலை நேற்று மாலை மத்திய பாரதீயஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி தெரிவித்தார்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிமிடம் கூட புதுவையில் பணிபுரியமாட்டேன் என கிரண்பேடி கூறிஇருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கவர்னர் கிரண்பேடி சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். அவரால் 2 ஆண்டுகள் புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை. என்னை தவிர அனைவருக்கும் விழாவுக்கு வரும்படி கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். தன்மானமுள்ளவர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுவை கவர்னர் கிரண்பேடி- முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மோதல் அவ்வப்போது உச்சகட்டத்தை எட்டுவதும், பின்னர் சமாதானமாகி விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களான நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், ஆகியோர்கள் கவர்னரிடம் சமரச போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் விழாவில் பங்கேற்க அமைச்ர்களுக்கு மட்டும் கவர்னர் கிரண்பேடி அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    கவர்னர் விழாவில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ள நிலையில் நாளைய விழாவில் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ×