search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old woman dies"

    • குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
    • மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).

    சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.

    அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85).

    கடந்த 17-ந் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் உண்ணாமலை பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற பாது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் விவசாயி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது64).

    இவர் இன்று காலை காவேரிப்பாக்கத்தில் இருந்து வாலாஜாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.

    அப்போது ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பவர் ஓட்டி வந்த பைக் உமா மகேஸ்வரி மீது ேமாதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமா மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்திற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் சென்னம்மா (70). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சென்னம்மா படுகாயம் அடைந்தார்.

    சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உசிலம்பட்டி அருகே இன்று நடந்த கார் மோதி மூதாட்டி-பசு மாடு பலியாயினர்.
    • இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது65). இவர் இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றார்.

    நக்கலப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வேமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரஞ்சிதம், பசுமாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பசுமாடு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    விபத்து தொடர்பாக தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரஞ்சிப்பேட்டை இந்திரா வீதியைச் சேர்ந்தவர் மயிலியம்மாள்(87) இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நெரிஞ்சிப் பேட்டையில் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அம்மா–பேட்டை பகுதியில் இருந்து நெருஞ்சிப் பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மைலியம்மாள் மீது மோதியதில் பின்னந் தலையில் பலத்த அடிபட்டது உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தார் இதுகுறித்து மயிலியம்மாளின் மகன் ஆடலரசன் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்த போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60).

    சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டின் வெளியே கிடந்த பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்து வைத்தார்.

    அப்போது அதன் இடையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கண்ணம்மாள் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 5-வது தெருவை சேர்ந்தவர் யசோதை (வயது 65). இவர் இன்று குள்ளஞ்சாவடி செல்வதற்கு பண்ருட்டி பஸ் நிலையம் வந்தார். அங்கு மாம்பட்டு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார். அப்போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே யசோதை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    • 100 நாள் வேலையின்போது பரிதாபம்
    • போலீஸ் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெரியதாய் ( வயது 75 ). இவர் நேற்று வளையாம் பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஏரிப்பகுதியில் 100 நாள் பணி யில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சக பணியாளர்கள் உடனடியாக மூதாட்டியை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இதுதொடர்பாக வாணி யம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×