search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man arrested"

    தண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைத்து 2 மணிநேரம் தொடர்ந்து வன்கொடுமை செய்ததால் சிறுமி இறந்தார் என்று கைதான முதியவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூரை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி அதே பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

    சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. செங்கம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான தலைமையிலான போலீசார் கணேசனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சம்பவத்தன்று நான் மது குடித்துவிட்டு போதையில் இருந்தேன் சிறுமி வீட்டின் அருகே தனியாக விளையாடி கொண்டிருந்தார்.

    அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்தேன். அவளை ஏமாற்றி கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த புதர் பகுதியில் கீழே தள்ளி கட்டிபிடித்தேன்.

    இதனால் மிரண்டுபோன அவள் கூச்சலிட்டாள். வாயை பொத்தினேன். தொடர்ந்து 2 மணி நேரம் வன்கொடுமை செய்தேன். இதனால் சிறுமியின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி அவள் துடிதுடித்து இறந்து விட்டாள்.

    போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டு பிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கணேசன் மிகவும் கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளார். அவர் சிறுமியின் கழுத்தை பயங்கரமாக கடித்துள்ளார். அவரது பற்கள் சிறுமி கழுத்தில் பதிந்துள்ளது.

    மேலும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான கணேசன் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டார்.

    7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி சுப்பாண்டா பாளையத்தை சேர்ந்தவர் ஹனிபா (62). இவர் அப்பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி வேலைக்கு சென்று திரும்பிய தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஹனிபாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சங்கரன்கோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற முதியவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர் பகுதியில் அதிக அளவில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நகைகடை பஜார் பகுதியில் போலீசார் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

    விசாரணையில் அவர் சங்கரன்கோவில் சங்குபுரம் 4-வது தெருவை சேர்ந்த குருசாமிசெட்டியார் மகன் கோவிந்தராஜ் (60) என தெரியவந்தது. 

    இது சம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும் நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை பற்றிய தகவல் எதுவும் தெரிந்தால் பொதுமக்கள் உடனே டவுன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
    கொடைக்கானலில் சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் செண்பகனூர் அருகே உள்ள வைரவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் நாகராஜ் (வயது 14). மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவனிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்ற காட்டுமணி (65) குடி போதையில் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று சிறுவனை தனியாக அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்ட போது அவன் கூச்சலிட்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு மணியை பிடித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் விசாரணை நடத்தியதில் காட்டு மணி சிறுவனிடம் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காட்டு மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவேற்காட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு சக்ரேஸ்வர் நகரில் உள்ள முள்புதரில் நேற்று மாலை ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்றனர். அப்போது பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணிவியை முதியவர் ஒருவர் அங்கு இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனால் அங்கு சென்றவர்கள் அந்த முதியவரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர்.

    மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவரை பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் ஏழுமலை (60). திருவேற்காடு முருகன் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    தினமும் பள்ளியில் இருந்து அந்த வழியாக வீடு திரும்பும் மாணவியை நோட்டம் பார்த்து அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.#tamilnews
    தர்மபுரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
    தருமபுரி:

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள கோணம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஜோதி (வயது37). இவர் நேற்று வெளியூருக்கு செல்வதற்காக தருமபுரி நகர பஸ் நிலையத்திற்கு வந்தார். 

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அருகில் உள்ள கூழ் கடை நடத்தி வரும் இண்டூரை சேர்ந்த ரவிக்குமார் (62) என்பவர் விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து ஜோதி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.
    ஈரோடு பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் பெரிய கொடிவேரி வீரசென்னனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40) குமார் சம்பவத்தன்று தனது நண்பர் மணியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார்

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க்செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். குமார் பின்னால் ஒரு முதியவர் நின்று கொண்டு இருந்தார் அப்போது குமார் பின்னால் நின்று கொண்டிருந்த முதியவர் திடீரென குமார் பையில் இருந்த பணத்தை திருடி கொண்டு ஓடினார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் திருடன் திருடன் என கூச்சலிட்டார்

    அந்த வழியாக வந்தவர்கள் அந்த முதியவரை மடக்கிப் பிடித்தனர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அந்த அந்த முதியவர் ஈரோடு சம்பத் நகரைச்சேர்ந்த ராஜேந்திரன் என தெரிய வந்தது இதையடுத்து அந்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ×