search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபரிடம் பணம் பறித்த முதியவர் கைது
    X

    வாலிபரிடம் பணம் பறித்த முதியவர் கைது

    ஈரோடு பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் பெரிய கொடிவேரி வீரசென்னனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40) குமார் சம்பவத்தன்று தனது நண்பர் மணியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார்

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க்செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். குமார் பின்னால் ஒரு முதியவர் நின்று கொண்டு இருந்தார் அப்போது குமார் பின்னால் நின்று கொண்டிருந்த முதியவர் திடீரென குமார் பையில் இருந்த பணத்தை திருடி கொண்டு ஓடினார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் திருடன் திருடன் என கூச்சலிட்டார்

    அந்த வழியாக வந்தவர்கள் அந்த முதியவரை மடக்கிப் பிடித்தனர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அந்த அந்த முதியவர் ஈரோடு சம்பத் நகரைச்சேர்ந்த ராஜேந்திரன் என தெரிய வந்தது இதையடுத்து அந்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    Next Story
    ×