என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nerthikadan"
- படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
- பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
- 7-ந்தேதி சுயம்பு வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அது போல் ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது உண்டு. அதுபோல் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவின் 4-வது நாளான நேற்று கருவறையில் உள்ள மூலவரான சுயம்பு வராகி அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.
தற்போது ஆஷாட நவராத்திரி விழா என்பதால் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்கள் அம்மியில் மஞ்சளை அரைத்து அதை அம்மனுக்கு கொடுக்கின்றனர். அதை அபிஷேகத்துக்கு பயன்படுகிறார்கள். மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும் என்பது பெண்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 7-ந்தேதி அன்று சுயம்புவராகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை.
- புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர்.
சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற செகுட்டு அய்யனார், சூரக்குடியில் சிறைமீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில்களில் புரவி எடுப்பு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புரவி தயாரிக்கும் பணி கடந்த 3-ந் தேதி குலால வம்சத்தை சேர்ந்தவர்களிடம் பிடி மண் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர்கள் குதிரை சிலை செய்ய நான்கு கரை பங்காளிகளுடன் இணைந்து சுமார் 40-க்கும் மேற்பட்டோர் 272 புரவிகளை எம்.சூரக்குடி புரவி பொட்டலில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொற்று நோயில் இருந்து காப்பது உள்ளிட்டவைக்காக புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தயாரான 272 புரவிகள் எம்.சூரக்குடி மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.அங்கு இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் சுவாமி அழைத்து புரவிகள் புறப்பட தயாரானது. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் புரவிகளை சுமந்து கொண்டு புறப்பட்டனர். இதில் சிறைமீட்ட அய்யனாருக்கு அரண்மனை புரவி ஒன்றும் படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை ஒன்றும், செகுட்டுஅய்யனார் கோவிலுக்கு அரண்மனை புரவி ஒன்றும் என 270 புரவிகள் புறப்பட்டன.
சூரக்குடிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு புரவிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர். கோவிலை சுற்றி உள்ள வளாக பகுதியில் புரவிகளை இறக்கி வைத்து தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மூலம் குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.
கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பும், மாட வீதியை சுற்றியும் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
தொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாணத்துடன் விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி துறிஞ்சிப்பட்டி, தின்ன கழனி, குட்டூர் உள்ளிட்ட 24 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய மகாபாரத நிறைவு விழா நடந்தது. இதையொட்டி தர்மபுரி ஓம் ஸ்ரீ விநாயகா நாடக சபா குழுவினரின் துரியோதனன் படுகளம் நாடகம் கோவிலின் முன்பு நடந்தது.
இதையொட்டி துரியோதனனை வதம் செய்த பாஞ்சாலி தேவி, தலை முடிச்சு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநங்கையிடம் துடைப்பத்தில் தலையில் அடி வாங்கினார்கள். இந்த படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதனை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் கடல் மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து வந்து, அதனை கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மாலையில் சாயரட்சை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமிக்கு விடை ஆரத்தி பூஜை, அர்த்தசாம பூஜை நடந்தது.
விழாவில் தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், நிர்வாகிகள் அழகானந்தம், ராஜமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.
முன்னதாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் நற்பணி மன்ற குழுவினரின் தேவாரம், திருவாசகம் பாட, பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தீர்த்த குடம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மாலையில் அன்ன மண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து குமாரகோவில் தெருவில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியும் நடந்தது.
முக்கிய விழாவான ‘குட்டிக் குடிக்கும்’ நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருளாளி ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். ஏராளமான ஆட்டுக்குட்டிகள் குட்டிக்குடித்தலுக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் மருளாளி அருள்வாக்கு கூறினார். பக்தர்கள் பலர் அருள்வாக்கு கேட்டனர். தொடர்ந்து அம்பாள் வீதியுலா நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
13-ந்தேதி புஷ்பவிமானம் மற்றும் கைலாச வாகன காட்சிகளும் நடக்கிறது. 14-ந்தேதி இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. 16-ந்தேதி காலை 6 மணிக்குள் பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை 7 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர் உற்சாகமும், 20-ந்தேதி நடராசர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு மயில் வாகன காட்சியும் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அவினாசியை அடுத்த ராயம்பாளையம் கிராம மக்கள் மண் குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ராயம்பாளையத்திலிருந்து களி மண்ணால் செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் காலை முதல் விரதமிருந்து தாரை, தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து மண்ணினால் அலங்காரமாக செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை சுமந்து கொண்டு ராயம்பாளையத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது வழிநெடுகிலும் சாலைகளில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் அவர்களை வரவேற்றனர். பக்தர்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ் மற்றும் சர்பத் ஆகியன வழங்கப்பட்டது.
ஆகாச ராயருக்கு சிறப்பு பூஜை செய்து குதிரைகளை அங்கே வரிசையாக நிற்க வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை மற்றும் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு அக்னி குண்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.
முன்னதாக பக்தர்கள் அக்னி சட்டியும் எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை காண்பதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் லாரிகளை நிறுத்தி பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இது கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக ராயன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவினாசி பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மதியம் அவினாசி அருகே உள்ள கருணைப்பாளையத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அங்கு தயார் செய்யப்பட்ட மண்குதிரைக்கு எலுமிச்சை பழ மாலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மண்குதிரையை சுமந்த பக்தர்கள் அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ராயன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது வழியில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மங்கலம் ரோடு-பைபாஸ் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்த போது சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பையில் தீ கனல் பட்டு தீப்பிடித்தது. உடனே ஊர்வலத்தில் சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
அவினாசி ராயன் கோவிலுக்கு மண்குதிரையுடன் வந்த பக்தர்கள் அங்கு அதை இறக்கி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறும் போது, ராயன் அவினாசி மக்களின் காவல் தெய்வம் ஆவார். அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் ராயன் காவல் காக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக மண்குதிரை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் மண்குதிரை சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவிளாசி திருவிழா நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு ராயன் காவல் காப்பார் என்பது ஐதீகம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்