என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அகஸ்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம்
Byமாலை மலர்12 April 2019 7:40 AM GMT (Updated: 12 April 2019 7:40 AM GMT)
கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் திருநாளான நேற்று காலை சுவாமி பச்சை கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். மேலும் பக்தர்களின் அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ் காரம் ஆகியனவும் நடந்தது.
முன்னதாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் நற்பணி மன்ற குழுவினரின் தேவாரம், திருவாசகம் பாட, பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தீர்த்த குடம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மாலையில் அன்ன மண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து குமாரகோவில் தெருவில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியும் நடந்தது.
முன்னதாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் நற்பணி மன்ற குழுவினரின் தேவாரம், திருவாசகம் பாட, பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தீர்த்த குடம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மாலையில் அன்ன மண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து குமாரகோவில் தெருவில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியும் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X