search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்திக்கடன்"

    தேர்த்திருவிழாவையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா 25-ந்தேதி முதல் வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள கோவில்களிலும் 26-ந்தேதி கிடாவெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தார்.

    மேலும், பெண்கள் கிராமங்களில் மடிப்பிச்சை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் செஞ்சேரிமலையை சேர்ந்த ஆண் பக்தர் 30 அடி நீல அலகு குத்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் ெசலுத்தினார்கள்.

    கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில்18 கிராம பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த சூலக்கல் மாரியம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் -விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×