என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sowdeswari amman"
- திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.
கோவை,
கோவை டவுன்ஹால் பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழா நடந்து வருகின்றனர்.
கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.
இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து, டவுன்ஹாலில் உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.
இந்நிலையில் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கத்தி போடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நாளான நேற்று கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கோவிலில் விரதம் இருந்த திரளான பக்தர்கள், தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் மூக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்