search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sowdeswari amman"

    • திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    கோவை,

    கோவை டவுன்ஹால் பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழா நடந்து வருகின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

    இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து, டவுன்ஹாலில் உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    சங்கராபுரம் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கத்தி போடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த வகையில் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இக்கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கத்தி போடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கோவிலில் விரதம் இருந்த திரளான பக்தர்கள், தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் மூக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 
    ×