search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யனார்"

    • சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களாக இதை தயாரித்து வருகின்றனர்.
    • இந்த பிரமாண்ட வடக்கயிறு சுமார் இரண்டரை டன் எடை கொண்டது.

    சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுவதால் இந்த பகுதியில் தென்னை நார்களை கொண்டு கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாத்து கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் உடைய பராசக்தி கோவில் தேருக்காக 170 அடி நீளமும், 12 இன்ச் சுற்றளவு கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களாக இதை தயாரித்து வருகின்றனர்.

    இந்த பிரமாண்ட வடக்கயிறு சுமார் இரண்டரை டன் எடை கொண்டது. தென் தமிழகத்திலேயே சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்த தேர் வடக்கயிரானது முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவதாகும். தென்னை தேங்காய் மட்டைகளிலிருந்து நார் உறித்து பக்குவம் செய்து கயிறாக திரித்து பின் வடக்கயிராக தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறும்போது, இறைவன் திருப்பணியில் எங்கள் குடும்பத்தார்கள் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர் வடக்கயிறு என்பது இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே நினைத்து நாங்கள் பணிபுரிந்து வருகின்றோம். தேர் வடக்கயிறு தயாரிக்கும் போது தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மாமிசம் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

    • பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

    சாயல்குடி சிறை மீட்ட நிறைகுளத்து அய்யனார் வன்னியராய சுவாமி கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    நேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்த பெண்களும் ஆண்களும் சாயல்குடி ராமநாதபுரம் சாலை வழியாக ஊர்வலமாக குதிரை மற்றும் தவளும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி பொம்மைகளை எடுத்து நகர் வலமாக வந்து அய்யனார் கோவிலை வந்தடைந்தனர். பின்பு வாணவேடிக்கையுடன் பொங்கல் பானை எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், சாயல்குடி யாதவ மகா சபை நிர்வாகிகள் மற்றும் சாயல்குடி யாதவ இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • 6-ந்தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது.

    சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து செகுட்டு அய்யனார் கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், புரவி எடுப்பு விழாவிற்காக கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி குயவர்களிடம் புரவிகள் செய்ய பிடி மண் வழங்கப்பட்டது. 30 குயவர்கள் புரவி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 2 அரண்மனை புரவிகள் மற்றும் 280 நேர்த்திக்கடன் புரவிகள் என 282 புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 20 புரவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    செகுட்டு அய்யனார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடன் புரவிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தென் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு எம்.சூரக்குடியில் 282 புரவிகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ளது. மேலும் சுமார் 20 அடி உயரம் கொண்ட அரண்மனை புரவிகளை தூக்குவதற்கான பிரமாண்டமான தூண்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார். குயவர் மணிகண்டன் கூறுகையில், முறையாக புரவிகள் தயாரிக்கப்படுவதற்காக 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் விரதம் இருந்து மண் எடுத்து புரவிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரித்து வைக்கப்படும் புரவிகள் கை, கால்கள், தலை போன்றவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டு குதிரை பொட்டலில் சூலை வைத்து எரியூட்டி காய வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குதிரை பொட்டலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தலை ஒட்டப்பட்டு வர்ணம் பூசும் பணி தொடர்ந்து நடைபெறும்.

    குதிரைப் பொட்டலில் இருந்து கிராமத்தார்கள் சார்பிலும் நேர்த்திக்கடன் பக்தர்கள் சார்பிலும் 6-ந் தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து புரவி பொட்டலில் முறையாக பூஜை செய்யப்பட்டு புரவி பொட்டலில் இருந்து கோவிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி கழுவன் திருவிழா நடக்கிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வரும் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றதால் இந்தாண்டு நாளை ஆனி மாதத்தில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்குகிறது. முன்னதாக கடந்த 15-ந்தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை முதல் நிகழ்ச்சியாக கடந்த 15-ந் தேதி இரவு சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் நிகழ்ச்சிக்காக சென்ற வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் வெண்கல விநாயகர், அம்பாள், சேவுகப் பெருமாள் அய்யனார் உற்சவமூர்த்திகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான கொடிமரத்தின் முன்பு சிவாச்சாரியாருக்கான காப்பு செல்வமணி சிவாச்சாரியாருக்கும், பூஜகருக்கான காப்பு சேவுகமூர்த்தி பூஜகர்க்கும் கட்டப்பட்டது. இதையடுத்து பிடாரியம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் சின்னையா, கதிரேசன், அருணகிரி, சேதுராமலிங்கம், செந்தில் கணேசன், சேவற்கொடியோன், கணேசன் உள்ளிட்ட வேளார் வம்சாவளி சிவாச்சாரியார்களுடன் கோவில் பரம்பரை பூஜகர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் 29-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 30-ந்தேதி கழுவன் திருவிழாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 3-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    4-ந் தேதி 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்பட்ட பிரசித்தி பெற்ற சேவகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கல தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் 9-ம் நாளன்று நடைபெறும் தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு கோவில் திருவிழா ஆனி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை காலை முதல் நிகழ்வாக சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 5-ம் நாள் திருவிழாவான வரும் 29-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, 30-ந் தேதி கழுவன் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் ஜூலை மாதம் 3-ந் தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
    • மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை கொண்டு நாமம், ஓம், சிவலிங்கம் வடிவிலும் மற்றும் மலர்கள் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மண்டல பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூர்ணா குதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலம்புரி சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர் சேவகப் பெருமாள் அய்யனார், சுயம்பு லிங்கேஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், பிடாரியம்மன் போன்ற கோவில் சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் சுமந்து கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சேவகபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பிலும் அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம அருணகிரி, , அடைக்கலம் காத்த நாட்டார்கள் சிங்கம்புணரி கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானியம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

    • புரவிகள் அனைத்தும் இன்று கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
    • காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை பால் குட ஊர்வலம் நடைபெற்றது. எஸ்.எஸ்.கோட்டை சீனி விநாயகர் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து படைத்தலைவி அம்மன் கோவிலை அடைந்தனர்.

    அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சியா முத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை சியாமுத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டிலிருந்து கிராமத்தார்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு படைத்தலைவி அம்மன் கோவிலில் சேர்க்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சியாமுத்துப்பட்டியில் உள்ள கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவிற்காக படைத்தலைவி அம்மன் கோவில் அருகே உள்ள குதிரை பொட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டு இரண்டு அரண்மனை புரவிகள், 6 காரனகாரர்கள் புரவி மற்றும் ஒரு நேர்த்திக்கடன் புரவிகள் என மொத்தம் 9 புரவிகள் குதிரை பொட்டலில் தயாரானது.

    தயாராக இருந்த 9 புரவிகளை கிராமத்தார்கள் சாமியாடிகள் உத்தரவு பிறப்பித்தவுடன் அதனை சுமந்து கொண்டு குதிரை பொட்டலில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக எஸ்.எஸ்.கோட்டை புரவி பொட்டலுக்கு சென்றடைந்தனர். எஸ்.எஸ். கோட்டை சீனிவிநாயகர் கோவிலில் இருந்து சியாமுத்துப்பட்டி படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு பூத்தட்டு எடுத்து வரும் விழா நடைபெற்றது. புரவி பொட்டலில் வைக்கப்பட்ட புரவிகள் அனைத்தும் இன்று மாலை கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ். கோட்டை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கிராமத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டு மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

    சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா 21 ஆண்டுகளுக்கு பின் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணா குதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பணிக்குழு தலைவர் ராம அருணகிரி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அன்று மாலை பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் மலர் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டனர்.

    அடைக்கலம் காத்த நாட்டார்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண வைபோக நிகழ்ச்சியை 15-க்கும் மேற்பட்ட பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். முன்னதாக சுவாமிக்கு மாலை மாற்றும் வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியின்போது பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டு மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

    இரவு பல்வேறு அமைப்புகள், கிராமத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிங்கம்புணரி அக்னி சிறகுகள் சார்பில் தனியார் தொலைக்காட்சி புகழ், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டார்கள் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
    • இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாகவும் சிங்கம்புணரியின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கு ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.ராம அருணகிரி தலைமையில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, கோவில் கண்காணிப்பாளர் தன்னாயிரம், கிராம அம்பலம் சத்தியசீலன், கிராம முக்கியஸ்தர்கள் அடைக்கலம் காத்த நாட்டார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதை தொடர்ந்து சேவகப்பெருமாள் உடனான பூரணை புஷ்கலை தேவியாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தினமும் அன்னதான நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிங்கம்புணரி வட்டார பகுதியில் உள்ள 100 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருப்பணி குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம அருணகிரி தலைமையில் கோவில் அருகில் யாகசாலை அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தற்போது பிரமாண்டமாக யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகின்ற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி முதல் யாகசாலையில் சிறப்பு வேள்வி நிகழ்ச்சிகள் தொடங்கி முதல் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்குகிறது. பின்னர் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்ற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ராம.அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம் திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் அடைக்கலம் காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானீகம் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அலிவலம் கிராமத்தில், பழமையான பூர்ண புஷ்கலா மண்ணுமுடைய அய்யனார் கோவில் உள்ளது. அதே பகுதியில் பக்தநேய ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இவ்விரு கோவில்களிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்றன. திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. மாலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    இன்று(புதன்கிழமை) காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    நாளை( வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு குறிச்சி செந்தில் ஆண்டவர் மந்திராலய நிறுவனர் தன. ராமலிங்க சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மண்ணுமுடைய அய்யனார், பக்தநேய ஆஞ்சநேயர் மற்றும் அதன் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அலிவலம் ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

    • முற்கால பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாக ரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவன் சிலம்பரசன் கொடுத்த தகவ லின் படி அந்த கல்லூரி யின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாள ருமான தாமரைக் கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் போன்றோர் அங்கு சென்று களம் மேற்பரப்பாய்வு செய்தனர்.

    அப்போது அந்த சிலைகள் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக அய்யனார் சிற்பங்கள் நீர்நிலைகள் ஓரமாக அதிகம் கிடைத்து வருகின்றன. தற்போது கண்டறிந்த சிற்பமும் கண்மாயின் கரை ஓரமாக உள்ளது. இந்த சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் விரிந்த ஜடா பாரத்துடனும், கழுத்தில் ஆபர ணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் கை வளையல் களுடனும், வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடி சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டு உள்ளது. இடது காலை குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உட்புதிஹாசன கோளத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    அய்யனார் சிற்பத்தை மையமாகக் கொண்டு 2 பெண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பூரண கலை மற்றும் புஷ்கலை சிற்பங்கள் ஆகும். தத்தம் வலது கைகளில் பூச்சென்டினை பிடித்தபடியும் இடது கையினை ஹடிஹஸ்த மாக வைத்துள்ளனர். வலது காலினை மடக்கியும் இடது காலை கீழே தொங்கவிட்டும் சுஹாசன கோளத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட சிற்பங்களின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானவைகளாக கருதலாம். இந்த சிற்பங்களுக்கு நேர் எதிரே முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×