search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 5 மணியில் இருந்து 6 மணிக்குள் சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சி கால சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சிகால பூஜையும், 11 மணிக்கு சப்பரத்தில் உற்சவ அய்யனார் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-வது திருநாளான 31-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10-ம் திருநாளான 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    அன்று காலை 10.30 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 2 மணிக்கு பக்தர்கள் சுவாமிக்கு நேமிசங்கள் செலுத்தி வழிபடுகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×