search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karkuvel Ayyanar Temple"

    • தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலையம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெறும்.

    டிசம்பர் 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெண்கள் கோலமிடுதல் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் உற்சவர் வீதி உலா நடக்கிறது.

    டிசம்பர் 16-ந்தேதி காலை 6 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிகுடத்தில் எடுத்துவந்து ஊர் எல்லையில் இருந்து யானை மீது வைத்து வாண வேடிக்கை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தொடர்ந்து பேச்சிய ம்மன்னுக்கு முளைப்பாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 3-ந்தேதி மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.
    • கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது. இதில் நாட்டில் அமைதி வேண்டியும், நல்ல கனமழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடி பெண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து கோவில் வரை தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தக்கார் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் கலந்து கொண்டு புனித மணலை எடுத்து வழிபட்டனர்.
    • 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு இந்த திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வில்லிசை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டனர். மதியம் சிறப்பு அபிஷேகம், மாலையில் மாவிளக்கு பூஜை, இரவில் புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்பட்டார். மாலை 5.45 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இளநீர் என்ற கள்ளரை சுவாமி வெட்டியதும், தேரி மணலில் தண்ணீர் தெறித்து விழுந்தது. அப்போது கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணலை போட்டி போட்டு அள்ளி சென்றனர். பக்தர்கள் புனித மணலை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். சுபகாரியங்கள் நடைபெறும்போது புனித மணலை பயன்படுத்துவார்கள். உடல் நலம் குன்றியவர்களின் நோய் குணமாக வேண்டியும் புனித மணலை உடலில் பூசுவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டனர்.

    • கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மணல் எடுத்து செல்வார்கள்
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி, தேரியூரில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங் களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கள்ளர் வெட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் தினசரி வில்லிசையும், தொடர்ந்து நடந்து வந்தது.

    நேற்று கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலம் இடும் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம், மாலையில் நாட்டில் நல்ல கனமழை பொழிந்து நாடுசெழிக்க வேண்டி மாவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜையும் நடந்தது. கோவில் செயல் அலுவலர் காந்திமதி இருபூஜைகளையும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருவிழா தொடங்கியதையொட்டி சென்னை, திருச்சி, மதுரை, சிவகாசி உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேன், பஸ், லாரி போன்ற வாகனங்களில் வந்து குடும்பத்துடன் கோவிலில் தங்கி உள்ளனர்.

    நேற்றுஇரவு உற்சவர் திருவீதி உலாவும், கோவில் கரையரங்கத்தில், இன்னிசை கச்சேரியும் நடந்தது. கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் காலை 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல் காலை 10 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல். சுமார் 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் போட்டி போட்டு புனித மணல் எடுத்து செல்வார்கள் இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.

    விழாவில் சிறப்பு நிகழ்ச்சி யாக சமய சொற்பொழிவு, வில்லிசை, திரைப்பட இன்னிசை கச்சேரி ஆகியன நடைபெறும். 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் புனித மணல் எடுத்துச் செல்வார்கள். அரசு போக்குவரத்து கழகம் சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 500-க்கு மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உதவி ஆணையர் சங்கர் கோயில் தக்கார் அஜித் செயல் அலுவலர் காந்தி மதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    • இன்று இரவு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கிறது.
    • நாளை அய்யனார், பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியூர் கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

    விழாவில் தினமும் காலையில் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் வில்லிசை நடந்து வருகிறது.

    நேற்று காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலை அம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிடும் நிகழ்ச்சி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி மாவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கின்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், 9 மணிக்கு கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல், 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்ேவறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • காயாமொழி அருகே உள்ளது தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்.
    • இன்று காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதையொட்டி மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று (புதன்கிழமை 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • 31-ந்தேதி பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
    • வருகிற 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, நவகிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    31-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    ×