search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா 4-ந் தேதி நடக்கிறது
    X

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா 4-ந் தேதி நடக்கிறது

    • திருவிழா 3-ந்தேதி மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.
    • கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது. இதில் நாட்டில் அமைதி வேண்டியும், நல்ல கனமழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடி பெண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து கோவில் வரை தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தக்கார் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×