search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navaratri"

    • வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
    • இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது.

    வராகி அம்மனுக்கு 18-ந்தேதி மாலையில் இனிப்பு அலங்காரமும், 19-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 20 -ந் தேதி குங்குமம் அலங்காரமும், 21--ந் தேதி சந்தன அலங்காரமும், 22-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23-ந் தேதி மாதுளை அலங்காரமும், 24-ந் தேதி நவதானிய அலங்காரமும், 25-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26-ந்தேதி கனி அலங்காரமும், 27-ந்தேதி காய்கறி அலங்காரமும் 28-ந் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    • ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
    • அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள்.

    ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முதலாக வருவது வசந்தம் என்னும் ருது. ருதூநாம் குஸுமாகர: ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். வசந்த ருது ஆரம்பமாகும் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் 9 ராத்திரிகள் அம்பிகை ஆராதிக்க சிறந்த காலம்.

    இதையே வசந்த நவராத்திரி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1) தேவி நவராத்திரி, 2) வாராகி நவராத்திரி, 3) சரந் நவராத்திரி, 4) சியாமளா நவராத்திரி என்பதாக மொத்தம் நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்பது ஸ்ரீவித்யா சாஸ்திரம்.

    அவற்றில் நாம் ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் ஸ்ரீ வித்யா மார்கத்தில் ஈடுபட்டு சத்குரு மூலம் மந்திர உபதேசம்- தீட்சை பெற்று நவாவரணம் போன்ற விசேஷ பூஜைகளைச் செய்பவர்கள் இந்த 4 நவராத்திரிகளையுமே அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். சைத்ர மாதம் சுக்ல பட்ச பிரதமையான இன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாட்களிலும் தினசரி தேவியை விசேஷமாகப் பூஜைகள் செய்து ஸ்தோத்ர பாராயணம் செய்து கன்னிகா பூஜை கள் செய்து கொண்டாடலாம். மேலும் நவாவரண பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், சப்த சதீ பாராயணம், சுவாசிநீ பூஜை, சண்டீ ஹோமம் போன்றவற்றால் அம்மனை ஆராதிக்கலாம்.

    திருப்பாவாடை கல்யாண உற்சவம்

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் தேவஸ்தானத்தின் 36-ம் ஆண்டு பங்குனி ரேவதி திருமஞ்சன திருப்பாவாடை கல்யாணம் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு- 9442313789.

    • நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
    • சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை.

    ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.

    இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது.

    சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

    காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய வற்றை தரித்தவளாக கரங்களில் கிளியுடன் தியானம் செய்வதாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.

    ராஜ சியாமளா, மாதங்கி, மந்திரிணீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவள் மதங்க முனிவரின் மகளாக அவதரித்தவள். தசமகாவித்யைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.

    கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஆகவே மந்திரிணி என்று அழைக்கப்படுகிறாள்.

    லலிதா தேவி பண்டாசூரனுடன் போருக்கு புறப்பட்ட போது லலிதா தேவியின் கையில் உள்ள மனஸ் தத்துவமான கரும்பில் இருந்து தோன்றியவளே சியாமளா தேவி, லலிதா பரமேஸ்வரியின் மகாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருள் புரியும் இவள் லலிதா தேவிக்கு சக்தியை தந்தவள், லலிதா தேவியின் அக்சர சக்தியாக விளங்குபவள், சரஸ்வதியை போன்றே அருளுபவள்.

    என்றாலும் கூட வெளியில் உள்ள கலைகளுக்கும் திறமைகளுக்கும் அதிபதி சரஸ்வதி, சியாமளா தேவியோ தகரா காசத்தில் உள்ள கலைகளுக்கு அதிபதி, அம்பிகையின் பிரதிநிதியாக, ஆட்சி நடத்துபவள்.

    மேலும் கதம்பவனவாசினி என்றும் இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். அதாவது ஸ்ரீ லலிதா தேவியின் நிவாச தலமான ஸ்ரீநகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்கிறாள் சியாமளா தேவி. மதுரை மாநகருக்கு கதம்பவனம் என்ற ஒரு பெயரும் உண்டு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.

    பண்டாசூர வதத்தின்போது, கேயசக்ரம் என்னும் தேரில் இருந்து கொண்டு லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசூரனின் தம்பியான விஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள்.

    வீணையைக் கையில் தாங்கிக் கொண்டு காட்சி தரும் சியாமளா தேவி சங்கீதக் கலைக்கு தலைவி ஆவாள். சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கும் சங்கீதத்தை உபாசிப்பவர்களுக்கும் குறிப்பாக வீணை வாசிப்பவர்களுக்கும் விசேஷமாக அருள் புரிபவள் சியாமளா. ஆகவே இன்று முதல் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சங்கீத இசை பாடுவதாலும் சங்கீதத்தை கேட்பதாலும் சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை தேவியாக பாவித்து தாம்பூலம் தந்து மகிழ்விப்பதாலும் சியாமளா தேவியின் பூரண அருள் கிடைக்கும்.

    • பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், மன்னர்கள் தங்களது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். அதைதொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந் தேதி வரை நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் கடந்த 23-ந்தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்த பின்பு கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இந்த சாமிசிலைகள் நேற்று முன்தினம் மாலையில் பத்மநாபபுரம் அரண்மனையை வந்து அடைந்தன. அரண்மனை வாசலில் சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலை குமாரகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. அம்மன் சிலைக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் நுழைவு வாயில் முன்பு தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதன் பின்பு அம்மன் சிலை மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது.

    அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர். பின்னர், அம்மன் கோவில் முன்பு வரும்போது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்தநிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, பா.ஜனதா விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், கோவில் ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், நவராத்திரி குழு தலைவர் வீரபத்திர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், கேரள அறநிலையத் துறையினரும், நவராத்திரி குழு அமைப்பினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • 26-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பூஜைகள் நடந்தன.
    • பக்தர்கள் மலர்தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய சாமி சிலைகள் புறப்பட்டு சென்றன. அங்கு 26-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பூஜைகள் நடந்தன.

    ஒரு நாள் ஓய்வுக்கு பின், கடந்த 7-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட சாமி சிலைகள் நேற்று முன்தினம் களியக்காவிளைக்கு வந்தன. அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு குழித்துறையில் தங்கி விட்டு நேற்று காலையில் குழித்துறை மகாதேவர் கோலில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டன. மார்த்தாண்டம், சாமியார்மடம், அழகிய மண்டபம், பரைக்கோடு, மணலி, சாரோடு வழியாக வந்த சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை கோட்டை வாசல் வந்த சாமி சிலைகளை பத்மநாபபுரம் பகுதி பக்தர்கள் தாலபொலிவுடன் மலர்தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் ரதவீதியில் வந்த சாமிகளில் வேளிமலை முருகபெருமான் வடக்குதெரு வழியாக குமாரகோவிலுக்கு புறப்பட்டு சென்றது, சரஸ்வதிதேவியும், முன்னுதித்த நங்கையம்மனும் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடைந்தபோது தமிழக, கேரள மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மன்னரின் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உப்பரிகை மாளிகையில் உள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டது. யானைமீது அமர்ந்து வந்த சரஸ்வதி அம்மன் விக்ரகத்திற்கு அரண்மனையில் உள்ள ஓமப்புரைக்குளத்தில் வைத்து ஆராட்டு நடத்தப்பட்டு தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்றிரவு பத்மநாபபுரத்தில் தங்கிவிட்டு இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் வந்து சேருகிறது.

    • மகாசக்தி வாராஹி அம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
    • பூஜைகளை ஸ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாஸகர் ஸ்ரீ சக்திகணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா, களப்பாகுளத்தில் இருந்து உடப்பன்குளம் இணைப்பு சாலையில் ஜக்கம்மாள் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள மகாசக்தி வாராஹி அம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் நிறைவு நாளில் காலை யாக பூஜை, அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை ஸ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாஸகர் ஸ்ரீ சக்திகணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மஹாசக்தி வாராஹி அம்பாள் வழிபாட்டுக் குழுவை சேர்ந்த மனோன்மணி அம்பாள் உபாஸகர் சக்திவேல், பரமகணேசன், முருகன், பலவேசம், ராமகிருஷ்ணன் ஜெயராமன், சக்திவேல் மற்றும் செந்திலாண்டவர் பாதயாத்திரைக் குழுவினர் செய்திருந்தனர்.

    • நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
    • ஞாயிற்றுக்கிழமை மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த மாதம் 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தது. அங்கிருந்து 23-ந்தேதி முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றன.

    திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சாமி சிலைகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் ஆரியசாலை கோவிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிகுதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தது.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரகோவில் வேளிமலை முருகன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பள்ளி வேட்டையை தரிசிக்க பூஜைபுரை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பள்ளிவேட்டை முடிந்த பின்னர், ஆரியசாலை கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.

    நவராத்திரி சாமி சிலைகளுக்கு நேற்று முன்தினம் நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி தேவி சாமி சிலைகள் நேற்று கிள்ளிப்பாலம் சந்திப்புக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரத்துக்கு புறப்பட்டன. வழிநெடுக சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது.
    • பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது.

    பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது. இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், சந்தைபேட்டை பகுதியில் உள்ள பகவதியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
    • ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், விசேஷ பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் பரிவேட்டை மண்டபத்தை அடைந்து பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.

    அதைதொடர்ந்து வருடத்தில் முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார்.
    • பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விழாவின் 9-நாளான நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முத்துக்குமாரசுவாமி கோதமங்கலம் சென்றார்.

    கோதமங்கலம் கோதீஸ்வரர் கோவில் திடலுக்கு வந்த முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வாழை மரத்தால் அமைக்கப்பட்ட வன்னிகாசூரனை, முத்துக்குமாரசுவாமி அம்பு வில் கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கலந்துகொண்டு வதம் செய்தார்.

    பின்னர் வதம் நிகழ்ச்சி முடிந்ததும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தார். அதையடுத்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
    • நெல் மணிகளை அ.ஆ.இ எழுத்துகளை எழுதி வித்யாரம்பம் செய்வார்கள்.

    தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கூத்தனூரில் மட்டும் தான் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு திருப்பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நோட்டு, புத்தகம், பேனா, சிலேட் ஆகியவற்றை எடுத்து வந்து சரஸ்வதியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சரஸ்வதியை தரிசனம் செய்து நெல் மணிகளை அ.ஆ.இ எழுத்துகளை எழுதி வித்யாரம்பம் செய்வார்கள். அதன்படி நேற்று விஜயதசமி விழாவையொட்டி ஏராளமான குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து நெல்மணிகளில் அ, ஆ, இ எழுத்துக்களை சிறப்பு பூஜைகள் செய்து எழுதி (வித்யாரம்பம்) பழகினர்.

    • நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
    • ஆயுதபூஜை என பெயர் வந்ததற்கான கதை அறிந்து கொள்ளலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    ×