என் மலர்
வழிபாடு

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது.
- பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது.
பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது. இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், சந்தைபேட்டை பகுதியில் உள்ள பகவதியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story