search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Commissioner"

    • முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
    • பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது. எனவே அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், நகராட்சித்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனுவும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் முகம்மது சம்சுதீன் திடீரென தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம்பவானிநகராட்சி ஆணையாளராக உள்ள தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
    • குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடையை எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி 'சீல்' வைத்தனா்.

    இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

    • கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
    • நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் லோயர்கேம்ப் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு முல்லை பெரியாறு, லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1296 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிர படுத்தப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரை நகர் பகுதி களிலும் அனைத்து வார்டு களிலும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தேக்கம் பணிகள் முடிவடை ந்துள்ளன.

    இந்த பணிகளை மாநக ராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவு படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று மதுரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் சப்ளை செய்ய தேவையான ஏற்பாடுகளை எடுத்து வருவதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் நள்ளிரவில் சோடாபாட்டில் வீசிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கமி‌ஷனராக இருப்பவர் சுரேந்தர்ஷா. இவரது வீடு சிதம்பரம் கனகசபை நகரில் உள்ளது.

    நேற்று இரவு சுரேந்தர்ஷா மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மணிதர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் வீட்டின் மீது சோடாபாட்டில்களை சரமாரியாக வீசினர். இதில் சோடாபாட்டில்கள் சுவரில் பட்டு உடைந்து நொறுங்கின.

    இந்த சத்தம்கேட்டு நகராட்சி கமி‌ஷனர் சுரேந்தர்ஷா கதவை திறந்து வெளியேவந்து பார்த்தார். உடனே அங்கு நின்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசில் சுரேந்தர்ஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய மர்ம மனிதர்கள் யார்? எதற்காக வீசினர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயர் அதிகாரிகளிடம் அவதூறாக பேசியதாக ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். #Suspend
    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி (45), வாணியம்பாடி நகராட்சி கமி‌ஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதுகுறித்து, விசாரணையில் பார்த்தசாரதி மீதான புகார் நிரூபணமாகியுள்ளது.

    இதையடுத்து பார்த்த சாரதியை சஸ்பெண்டு செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்த ஆணை சென்னையில் இருந்து பேக்ஸ் மூலம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நகராட்சி கமி‌ஷனர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Suspend
    லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காஞ்சீபுரம் மற்றும் கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமி‌ஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

    அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

    அதன்படி காஞ்சீபுரம் கமி‌ஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.

    எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    கோவில் அருகே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் மேற்கு சுற்று சுவர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் பூந்தமல்லி நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே, குப்பைகளை அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய அமர்வு, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரி, திருவேற்காடு நகராட்சி ஆணையர், கருமாரியம்மன் கோவில் செயல் அதிகாரி ஆகியோர் வருகிற 13-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    ×