search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motor cycle theft"

    மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    செங்குன்றம்:

    செங்குன்றம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் பெயர் லிங்கேஸ்வரன் என்பதும் வியாசர்பாடி சாஸ்திரிநகரை சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேப்பேரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நகரில் அடிக்கடி வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. சென்னை வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் திருட்டு போயின. இதுதொடர்பான புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக வடபழனி அஜித்குமார், சீனிவாசன், சந்தோஷ், ஏழுமலை ஆகிய 4 பேரை வேப்பேரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஷேக்முகைதீன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மர்மகும்பல் திருடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர் நேதாஜி மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் பிரேம்தாஸ் (வயது 28). வேலூர் வந்த இவர் சி.எம்.சி. அவுட்கேட் அருகே காட்பாடி சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மணியக்கார தெருவை சேர்ந்த பாலு (55). இவரது பைக்கை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டனர்.

    அம்மூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாஸ்கரன் (52) வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுபற்றி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்காடு தாலுகா மய்யூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (41) என்பவர் பரதராமியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி அருகே பைக் நிறுத்திவிட்டு சென்றார்.அதனை திருடி சென்றுவிட்டனர். திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பாதி விலைக்கு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஓட்டேரி பகுதிகளில் வீட்டின் முன்பு பஜார் வீதி மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வந்தது.

    இது குறித்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மறைமலைநகர் போலீஸ் நிலையங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி வண்டலூர் டி.எஸ்.பி. வளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாஸ்கர், நந்த கோபால் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேளம்பாக்கத்தை சேர்ந்த பழனிதங்கம் (20), கூடுவாஞ்சேரி தைலாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (30) என்பதும், 20 நாட்களுக்கு ஒருமுறை புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிந்தது.

    போலீசில் சிக்காமல் இருக்க அவர்கள் இந்த நூதன முறையை கையாண்டு உள்ளனர்.

    திருட்டு மோட்டார் சைக்கிள்களை அவர்கள் வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் பாதி விலைக்கு விற்று உள்ளனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள்களை விற்று பணம் கொண்டு வருவதற்காக தைலாவரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (28) என்பவரை கூட்டாளியாக சேர்த்து உள்ளனர். அவனையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 17 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 26 விலை உயர் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    கைதான 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்த 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 8 மாதத்தில் 70-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக வாகன உரிமையாளர்கள் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேரமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கேமிராக்கள் செயல்படுவது இல்லை. ஆஸ்பத்திரியில் 4 இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இதில் 2 இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த 2 கண்காணிப்பு கேமிராக்களும் வேலை செய்ய வில்லை.இதனை நோட்டமிடும் திருடர்கள் எளிதாக இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் நடந்து வருகிறது.

    கடந்த வாரத்தில் மட்டும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு பேனதாக புகார் வந்துள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் திருட்டு சம்பவத்தை தடுக்க பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். மேலும் செயல்படாத கண்காணிப்பு கேமிராக்களை சரி பார்க்க வேண்டும். அப்போது தான் மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோயம்பேடு அருகே என்ஜினீயரிடம் மோட்டார் சைக்கிள் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான் பேட்டை குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் கிஷோர் (21). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    நேற்று இரவு 2மணி அளவில் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சைக்கிளில் டீ விற்பனை செய்து கொண்டிருந்த அண்ணா நகர் என்.வி.என். நகரைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபரிடம் ஆட்டோவில் வந்த 2 பேர் கும்பல் ரூ. 3000 வழிப்பறி செய்தனர்.

    இதை கண்ட கிஷோர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு ஆட்டோ எண்ணெய் குறிக்கும் படி கூறி கூச்சலிட்டார் இதை கண்ட வழிப்பறி கும்பல் கிஷோரின் இருசக்கர வாகனத்தையும் மேலும் அவரிடமிருந்த ரூ.150 பணத்தையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசில் முருகன், கிஷோர் புகார் அளித்தனர்.

    ராமாபுரம் கோத்தாரி நகரில் நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இசக்கிமணி என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.

    இது குறித்து ராயலா நகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    முதலியார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    முதலியர்பேட்டை கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரதாப் (வயது 31). இவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி காலை தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு வேலைக்கு வந்தார்.

    பின்னர் கடை அருகே மோட்டார் சைக்கிளை பூட்டி விட்டு கடையில் வேலை பார்த்தார். மதியம் 1 மணிக்கு பிரதாப் தனது மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதை காணாமல் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பிரதாப் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில், பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது.அதை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

    நேற்று காலை போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட அந்த வாலிபர் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவை அருகே ரெட்டிச்சாவடி உடலப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி (வயது 26) டிரைவர் என்பதும், அவர் செலவுக்கு பணம் இல்லாததால் கள்ளச் சாவி போட்டு பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் கூறினார்.

    இதையடுத்து ராஜியை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×