search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stanley government hospital"

    • நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
    • உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராயபுரம்:

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னா (வயது 30). திருமணமானவர். இவர் தொண்டையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருக்கு நவம்பர் 1-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சின்னா உள்நோயளியாக தங்கி கிச்சையில் பெற்று வந்தார். எனினும் நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு சின்னா ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு ஆஸ்பத்தரியில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார்.
    • 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களது மகன்கள் நவீன்(வயது34), விவேக்(32).

    மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரைவில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகேஸ்வரி அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று காலையும் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கணவர் அசோகன் கண்டித்ததாக தெரிகிறது.

    ஏற்கனவே மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல்கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை நாகேஸ்வரியின் இறுதி சடங்குநடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.

    எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த விவேக் திடீரென எழுந்து மண்ணெண்ணை கேனுடன் காசிமேடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விவேக்கின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவேக் தனது தாய் நாகேஸ்வரி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். நேற்றுமதியம் தாய் தீக்குளித்தபோது வீட்டில் இருந்த விவேக் பார்த்து கதறி துடித்து உள்ளார். இதனால் தாயின் நினைவில் அவர் மனவேதனையில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்துவிட்டார்.

    இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சோழவரம்:

    சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டினார்கள். அப்போது குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முகமும் அழுகி சிதைந்து காணப்பட்டது.

    குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி உள்ளது. எனவே பிறந்தவுடன் குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியை சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் குழந்தையின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதற்காக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் அடிப்படை சோதனைகள், அதிநவீன சோதனைகள் மேற்கொள்வதை வைத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

    வசதி படைத்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்து கொள்கிறார்கள். சாதாரண மக்கள் பொருளாதார பிரச்சினையால் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நோய்கள் முற்றிய நிலையில் ஆபத்தை சந்திக்கிறார்கள்.

    இதை தவிர்க்க ஏழைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.

    ரூ. 1000 கட்டணத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் வருமாறு:-

    சர்க்கரை, சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சிறுநீரகம், கல்லீரல், மஞ்சள் காமாலை, இதய பரிசோதனை (இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே), வயிறு அல்ட்ராசவுண்டு, பெண்களுக்கு மார்பக புற்று நோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், எலும்பின் உறுதித்தன்மை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    இது தவிர கண், காது, மூக்கு, தொண்டை உள்பட ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான சோதனைகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ராயபுரம்:

    கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு கையில் காயமடைந்த தனது மகளை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார்.

    ஆட்டோவை புறநோயாளிகள் பிரிவு வெளிப்புறம் நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குள் சென்றார்.

    இரவு 11 மணியவில் வேல்முருகனின் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆட்டோவின் அருகே ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    உடனடியாக மருத்துவமனை பாதுகாவலர்களும், போலீசாரும் இணைந்து ஆட்டோவில் பற்றிய தீயை பரவாமல் அணைத்தனர். எனினும் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.

    மர்ம நபர்கள் யாரேனும் ஆட்டோவுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஷேக்முகைதீன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீ குடித்து கொண்டிருந்த ரவுடி பல்சர் பாபு, போலீஸ்காரர் பைக்கை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான்.

    ராயபுரம்:

    காசிமேடை சேர்ந்த பிரபல கொள்ளையன் ‘பல்சர்’ பாபு (வயது 30). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி போலீசார் வழிப்பறி வழக்கில் பல்சர் பாபுவை கைது செய்தனர். பின்னர் அவன் குண்டர் சட்டத்தில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தான்.

    இந்த நிலையில் பல்சர் பாபுவுக்கு மூலநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவனை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணி அளவில் பல்சர் பாபு டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கூறினான்.

    இதையடுத்து அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியின் எதிரே உள்ள கடைக்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியதும் அதில் இருந்த சாவியை போலீஸ்காரர் எடுக்க மறந்து விட்டார். மேலும் வண்டி மீது பாதுகாப்புக்கு கொண்டுவந்த ஒரு துப்பாக்கியையும் வைத்து இருந்தனர். பின்னர் போலீசாரும், பல்சர் பாபுவும் கடையில் நின்றபடி டீ குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சாவி இருப்பதை கவனித்த பல்சர் பாபு திடீரென போலீசாரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்தான்.

    மேலும் அதிலிருந்த துப்பாக்கியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற் கிடையே பல்சர் பாபுவுடன் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர்கள் கஜேந் திரன், சுந்தர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பல்சர் பாபுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ×