என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "motor cycle accident"
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவர் ராஜபாளையம் 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருந்தார்.
தினமும் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடித்துவிட்டு ரமேஷ் ஊருக்கு புறப்பட்டார்.
ஆலங்குளம் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த ரமேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள பணங்குப்பம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 52). பா.ம.க. பிரமுகர்.
இவர் நேற்று இரவு வளவனூரில் இருந்து பணங்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வளவனூர் அருகே உள்ள நல்லரசன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரத்தினத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரத்தினம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரசு ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.
விபத்தில் பலியான ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியக்காட்டுகாலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி.
இவரும், இவரது மனைவி வேதவல்லி (26), மகன்கள் அரீஷ் (4), பாகுபலி (2), அதே பகுதியை சேர்ந்த நீலாம்பரி ஆகியோரும் ஒரே மொபட்டில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
மொபட்டில் இருந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வேதவல்லியும், பாகு பலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விஜய், அரீஷ், நீலாம்பரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அரீஷ் பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் வெற்றி (வயது 18). அதே பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் அருண் (17). இவர்கள் 2 பேரும் லாரி கிளீனர் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு தங்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் போதையில் ஒரே மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இவர் வத்தலக்குண்டுவில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
குடிபோதையில் வந்த வாலிபர்கள் பழனிக்குமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் வெற்றி மற்றும் பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பழனிக்குமாருக்கு அருணாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடிபோதையில் ஏற்பட்ட விபத்தால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58) வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி 4 வழிச்சாலையில் அழகர்சாமி சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகர்சாமி இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 38). இவர் சிவகங்கையில் உள்ள கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். செய்களத்தூர் விலக்கில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முகமது இஸ்மாயில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இளையராஜா (வயது 25), விவசாயி. இவர் நேற்று மாலை பெட்ரோல் போடுவதற்காக தனது மொபட்டில் கருங்காலக்குடிக்கு புறப்பட்டார்.
கருங்காலக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜேசு, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி, சித்ரா என்ற மனைவியும், சிவப்பிரகாஷ்(23)என்ற மகன் மற்றும் தர்ஷினி(21) என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.
சின்னச்சாமி பெருந்துறைக்கு பைக்கில் வந்துள்ளார். பின்னர் தனது மகன் சிவப்பிரகாஷை பெருந்துறையில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்கள்.
இவர்கள் பெருந்துறை, அண்ணாசிலை பகுதியில் வந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த வேன் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னச்சாமி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சிவப்பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவர் கொட்டாரம் சந்திப்பில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பெரியசாமி தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். இன்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் பொருட்களை வாங்குவதற்காக பெரியசாமி கோட்டார் மார்க்கெட்டுக்கு வந்தார். இங்கு பொருட்களை வாங்கி விட்டு அவர் கடைக்கு திரும்பி சென்றார்.
சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி பெரியசாமி ரோட்டில் கீழே விழுந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த பலசரக்கு பொருட்கள் ரோட்டில் சிதறி விழுந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பெரியசாமி சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தென்தாமரைகுளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெரியசாமி பலியானது பற்றி அவரது மனைவி லதாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும், அவரது மகனும் அங்கு வந்தனர்.
பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்தனர். பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ் (50). இவர் கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆடம்பர மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார்.
அதனை நிறுத்துமாறு போலீஸ்காரர் அஜேஷ் சைகை காட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அஜேஷ் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அஜேஷை கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டயம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகயா (வயது 66). இவர் ஸ்ரீமுஷ்ணம்- ஆதிவராக நல்லூர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கனகயா மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக் காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் கனகயா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் சஜிகுமார். இவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.
நேற்று மாலை ஸ்ரீகண்டனும், சஜிகுமாரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செருப்பாலூரில் இருந்து குலசேகரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை சஜிகுமார் ஓட்டினார். ஸ்ரீகண்டன் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.
அவர்கள் குலசேகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே குலசேகரத்தில் இருந்து செருப்பாலூர் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக அந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீகண்டன், சஜிகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதில் சஜிகுமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீகண்டன் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஸ்ரீகண்டன் இறந்துவிட்டார். சஜிகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது விபத்து நடந்து உள்ள பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்