search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே மொபட்டில் சென்ற 5 பேரில் 3 பேர் விபத்தில் பலி
    X

    கோபி அருகே மொபட்டில் சென்ற 5 பேரில் 3 பேர் விபத்தில் பலி

    கோபி அருகே லாரியும் மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியக்காட்டுகாலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி.

    இவரும், இவரது மனைவி வேதவல்லி (26), மகன்கள் அரீஷ் (4), பாகுபலி (2), அதே பகுதியை சேர்ந்த நீலாம்பரி ஆகியோரும் ஒரே மொபட்டில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.

    மொபட்டில் இருந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வேதவல்லியும், பாகு பலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விஜய், அரீஷ், நீலாம்பரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அரீஷ் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×